Tuesday, July 5, 2016

அடே ஆடவா

எச்சில் தொட்டு எண்ணிப்பார்க்க
பெண் என்ன நோட்டுக்கட்டா?
சேரவில்லை என்று கிழித்தெறிய
பெண் என்ன சீட்டுக்கட்டா?

என் மதம் உயர்வென்பவனை
உன்மத்தன் என்றும்
என் இனம் உயர்வென்பவனை
உருப்படாதவன் என்றும்
கருதுகின்ற காலமடா இது..
பெண்ணை மட்டும் துச்சமென்று
அச்சமற்றுப் போவாயோ?

அன்றொரு பெண்ணின் உடை பறித்தான் துச்சாதனன்
இன்றொரு பெண்ணின் உயிர் பறிக்கவும் துணிந்துவிட்டாய் நீ
அவள் உன் தாயினம் என்பதை ஏனடா மறந்துவிட்டாய்?

கோழைக்குப் பால் கொடுத்த கொங்கைகள் அரிந்தவள்
சங்கத் தமிழ்ப் பெண்ணென்பதை மறந்தாயா நீ?
உன்னைவிட கத்திகள் அதிகம் எடுத்தவள்
உன்னைவிட உதிரம்அதிகம் சிந்தியவள்
பெண்ணென்று தெரியாதா உனக்கு?
உன்னைக் கிள்ளியெறிய எத்தனை நேரம்?
உனக்குக் கள்ளிப்பால் தர எத்தனை நொடி?
அவள் செய்யமாட்டாள்.
ஈன்று புறம் தருதல் என் தலைக்கடனென்று
நாட்டுக்குப் போர் புரியப் பிள்ளைகள் பெற்றுத்தந்தவள்..
இனியும் ஈன்று புறம் தருவாள்
அதில் சில கொலையாளிகள் இருக்கக்கூடும் என்றாலும்

#RIPSwathi

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

மனதைத் தொட்ட கவிதை.

ஸ்வாதி - May her soul rest in peace.......

மோ.சி. பாலன் said...

nandri Venkat