Sunday, August 3, 2014

அத்தே.. அத்தே..

ஞாயிற்றுக் கிழமை மதியம்....

ஆடிமாதம் புதுமனைவியை அம்மா வீட்டுக்கு அனுப்பிவிட்டு வார இறுதியில்கூட மாமியார் வீட்டு விருந்து சாப்பிட முடியாமல் தனிமையில் தவிக்கும் நம் கதாநாயகன் பாடும் பாடல் வரிகள் இவை...

அத்தே அத்தே அத்தே சோறாச்சோ...?
அத்தே அத்தே அத்தே கொழம்பாச்சோ...?
மீன் சட்டிக்குள்ளாற
மீன் நீந்தித்தான் போச்சோ..?
அத்தே பிரியாணி புலவும்தான் செஞ்சீங்களா?
அந்தத் தொடகறியும் தொக்காட்டம் பண்ணீங்களா?
அதப் பல நாளாப் பாக்காம
பல்தேச்சும் பலனில்ல
பசியோடு கெடக்கேனே நானே.. நானே...


GV தம்பி இந்தப் பல்லவியை OK பண்ணுவாருன்னு தான் நெனக்கிறேன்.

அப்படியே டைரக்டருக்கும் ஒரு scene suggestion சொல்லிடணும்...
"ஹீரோ இந்தப் பாட்டைப் பாடிக்கிட்டே பாய் கடை பிரியாணியாவது பார்சல் வாங்கிவரலாம்னு தெருவில் நடந்து போறாரு.. பாட்டு முடியும்போது அங்காளம்மன் கோயில் வருது.. அங்கு ஒரு அக்கா ஆடி மாசம் கூழு ஊத்துறாங்க.. 'தம்பி இந்தாப்பா'ன்னு கொடுக்கவே மறுக்க முடியாம ஒரு டம்ளர் குடிக்கிறாரு. உடம்புக்குக் "குளிர்ச்சிப்பா"ன்னு சொல்லவே மேலும் இரண்டு மூன்று டம்ளர் வாங்கிக் குடித்துவிட்டு ஏப்பம் விடுகிறார்.. இதோடு லஞ்ச் போதும்னு மீசையில் ஒட்டிய கூழை நாவால் ஹீரோ வழிக்கும்போது அப்படியே காமிரா ஜூம் ஆகிறது.."