Sunday, December 25, 2011

தேவாலயம் செல்வோம்

தேவாலயம் செல்வோம்
நித்தம் ஜெயம் தரும் தேவனைச் ஜெபித்திடவே - தினம்
வேதாகமம் சொல்வோம் (தேவாலயம்)

ஆலயம் ஆண்டவர் அன்பின் வீடு
அன்பர்கள் யாவரும் கூடிடும் கூடு
கூடியே தேவனைப் பாடியே மகிழ்வோம்
பாடியே ஏசுவின் மகிமையைப் புகழ்வோம் (தேவாலயம்)

தீபத்தின் ஒளியினில் சுடர்விடும் தூய்மை
தேவனின் கருணையில் துளிர்விடும் தாய்மை
தூயவள் மரியின் தாய்மையில் மலர்ந்த
பாலனின் புகழைப் பாலர்கள் பாடிட (தேவாலயம்)

ஞானத்தைத் தேடி வருபவர் கோடி
நியாயத்தைத் வேண்டி அழுபவர் கோடி
நன்மைகள் கோரி தொழுபவர் கோடி
நன்றிகள் கூறி மகிழ்பவர் கோடி (தேவாலயம்)

கலங்கரை விளக்கென வழி தரும் சிலுவை
கவலைகள் விலகிட நிழல் தரும் சிலுவை
இருகரம் விரித்தே வருகென அழைக்கும்
வருகிற யாவர்க்கும் கதவுகள் திறக்கும் (தேவாலயம்)
__________________________________________________________

அனைவருக்கும் கிருத்துமஸ் நல்வாழ்த்துக்கள்