Wednesday, October 20, 2021

விஷமுங்கோ

 மலைமலையாய் மாம்பழங்கோ

மருந்து வச்ச மாம்பழங்கோ


பளபளக்கும் பப்பாளிங்கோ

கல்லு வச்ச பப்பாளிங்கோ


குவிச்சு வெச்ச கொய்யாங்கோ

கெமிக்கல் வெச்ச கொய்யாவுங்கோ


குலை குலையா 

திராட்சைங்கோ

மருந்து தெளிச்ச

திராட்சைங்கோ


மழமழன்னு ஆப்பிளுங்கோ

மெழுகு போட்ட

ஆப்பிளுங்கோ


ஏழைக்கேத்த பழமுங்கோ

எங்க வாழைப்பழமுங்கோ

பாழும் வயிற்றைக்

கெடுக்கவே ஸ்ப்ரே

அடிச்ச பழமுங்கோ


நல்ல உணவு நாமும் தின்னு

நாப்பது வருசம் ஆச்சுங்கோ


சோத்துலயும் விஷமுங்கோ

கொழம்புலயும்

விஷமுங்கோ

கறியும்மீனும்

விஷமுங்கோ

காய்கறியும்

விஷமுங்கோ

கடைசியிலே

பாக்கப் போனா

கனிஞ்ச பழமும்

விஷமுங்கோ


விஷத்தைத் தின்னு

வாழும் மனுசன்

நல்லவனாவது

எப்படிங்கோ?

Sunday, October 17, 2021

காதோரம் நரையிருக்கு #REMIX

 Caution 60+  #REMIX

(காவேரிக் கரையிருக்கு மெட்டு)


காதோரம் நரையிருக்கு

கழுத்தோரம் திரையிருக்கு

நடையினிலே தளர்விருக்கு

நிமிர்ந்து நின்னா வலியிருக்கு

பஞ்சு போல முடியிருக்கு

அஞ்சு வயசு சிரிப்பிருக்கு

பல்லிரண்டு விழுந்திருக்கு

பிள்ளைகள் போலே மனசிருக்கு


என்னம்மோ போலிருக்கு

எப்படியோ உடம்பிருக்கு

காலையிலே தின்ற வடை

மாலை வரையில் நினைவிருக்கு

காபிக்கு சர்க்கரை இல்லை

சர்க்கரைப் பொங்கல் குக்கரில் இல்லை

ராத்திரியில் தூக்கமில்லை

கண் திறந்தும் ஆசையில்லை!


பஸ்ஸினிலே இடமிருக்கும்

ஏறுவதற்குள் நிரம்பிவிடும்

நிற்கும் நம்மைப் பார்த்தவுடன்

இளசுகள் எழுந்து இடம் கொடுக்கும்

ப்ரதர் என்ற வார்த்தை

பெரியவர் என்று மாறிவிடும்

அண்ணன் என்று சொன்னவரும்

அங்கிள் என்று சொல்ல வரும்


Thursday, October 14, 2021

கட்டுக்குள் அடங்காதவை

 செரிமானமாகாத அவமானங்களை 

அசைபோட்டுக் கொண்டிருக்கும்போதே

புதிதாய் ஒன்று நிகந்துவிட

தூரவரிசையில் மேலும் பல நிற்பதுபோல்

துணுக்குற்று ஒடுங்குகின்றது மனம்


பொறுமை எனும் ஆமை ஓடு

கவசமா இல்லை அவமானமா?

என்ற கேள்விக்கு

சுமை என்று வருகின்றது விடை


ஊர்-வதை அஞ்சி ஊர்வதை

வீழ்ச்சியென்றால் வருத்தம் வரக்கூடும்.

பதுங்குதலென்று கொள்வோம்...


மடித்து எழுதிய கட்டுக்குள் அடங்காத

காயங்களைக் காட்டவும் முடியாமல்

மறைக்கவும் முடியாமல்

தவிக்கின்றன வரிகள்

-பாலா சிவசங்கரன்

14 10 2020

Sunday, October 3, 2021

REMIX இது. ORIGINAL எது? #12

 பாலாற்றின் கரையிலே

வெகு நாளாக மரமொன்று

அதன் வேரும் புண்ணானது

சுடும் மண்ணில் திண்டாடுது


அங்கே ஒரு பாலம்

ஆற்றைத் தாண்டிப் போகும்

இங்கே இது பாவம்

நீருக்கெங்கே போகும்?

பூமிக்குள்ள இல்லாதத

வானத்திடம் மன்றாடுதோ?

காற்றுக்குள்ள இல்லாதத

கடலில் எடுக்க வாதாடுதோ?

வானம்‌ காயுது

அதுதானே பொழியுது?

மரமும் காயுது

அதுதானே காய்க்குது?

மரம் இன்றி நிழல் ஏது?

மணல் இன்றி நதி ஏது?