tag:blogger.com,1999:blog-58256439786102352012024-03-05T14:55:08.415-08:00மோ.சி. பாலன் பதிவுகள்மோ.சி. பாலன்http://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comBlogger292125tag:blogger.com,1999:blog-5825643978610235201.post-75832847754492893612022-10-10T11:19:00.005-07:002022-10-10T11:19:39.419-07:00வாளியை சிந்துறேன்....<p>கவிஞர் தாமரை, இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் மற்றும் பாடகி மதுஶ்ரீ மூவருக்கும் பெரிய ஓ </p><p>மல்லிப்பூ பாடல் பல வருடங்களுக்குப் பிறகு நான் ரிப்பீட் மோடில் கேட்கும் பாடல். (நியூயார்க் நகரம் தந்த அதே ஏக்கம் இந்தப் பாடலிலும் கிடைக்கிறது)</p><p>மதுஶ்ரீ அவர்களின் தமிழ் உச்சரிப்பு பற்றி சில விமர்சனங்கள் எனக்கும் உண்டு. ஆனால் குரல் மயக்கத்தைக் குறை கூற முடியவில்லை.</p><p>தாமரை அவர்களின் பதிவில் "வாளியை சேந்துறேன் தண்ணியக் காணோம்" என்று படித்துவிட்டு, பாடலில் "வாளியை சிந்துறேன் தண்ணிய காணோம்" என்று கேட்கும் போது முதலில் வருத்தமாக இருந்தது.</p><p>ஆனால் காதல் மயக்கத்தில் வெற்றுவாளியைத் தான் சேந்துவாளா பெண்? சேந்திய தண்ணியை ஆட்டி ஆட்டி சிந்திவிடுவதும் காதல் மயக்கம் தானே?!</p>மோ.சி. பாலன்http://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5825643978610235201.post-30083353575849785532022-10-09T05:34:00.004-07:002022-10-09T05:34:41.364-07:00ரீமிக்ஸ் இங்கே; ஒரிஜினல் எங்கே? 09 10 22 <p> ரீமிக்ஸ் இங்கே; ஒரிஜினல் எங்கே?</p><p><br /></p><p>பிரித்தாளும் சூழ்ச்சி எல்லாம்</p><p>பிரிட்டிஷ்காரன் தொடங்கி வெச்சான்</p><p>பரிகாரம் செஞ்சு வெக்க</p><p>இங்கே யாரும் பொறக்கலையே</p><p>நம்பிக்கைய வைக்குறியே</p><p>வம்புக்குள்ள சிக்குறியே</p><p>இப்பப் புரிஞ்சிக்கோ</p><p>உண்மைய அறிஞ்சிக்கோ</p><p>சொந்த ஜனங்கள வெறுப்பத நிறுத்திக்கோ</p>மோ.சி. பாலன்http://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5825643978610235201.post-12145986705356197762022-10-09T04:16:00.007-07:002022-10-09T04:16:57.965-07:00 ஈ ஆரி எச மாரி - my take<p> ஈ ஆரி எச மாரி </p><p>*****</p><p>நேற்று காரில் சென்று கொண்டிருந்த போது மனைவி மற்றும் மகளிடம், "பொன்னி நதி பாக்கணுமே" பாடலில் வரும் "ஈ ஆரி எச மாரி" பற்றி நான் படித்த விளக்கத்தைச் சொல்லிக் கொண்டு வந்தேன்.</p><p>உடனே என் மகள், "நீங்களும் கவிஞர் தானே(patted myself on my back!), மாற்று வரி சொல்லுங்கள் பார்ப்போம்" என்றார். சற்று நேரம் வண்டி அமைதியாகப் போகவே "என்ன ஆச்சு மாற்று வரி?" என்றார். யோசிக்கணுமில்ல? என்றதற்கு, "வீட்டுக்குப் போய்ச் சேர்வதற்குள் சொல்லி விட வேண்டும்" என்று உத்தரவிட்டார். வந்தியத்தேவன் குதிரையில் செல்லும் காட்சி விளக்கங்களைச் சொல்ல ஆரம்பித்தேன். "இதையெல்லாம் நீங்கள் மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். வரி தோன்றியவுடன் சொல்லுங்கள்" என்று கூறி விடவே வண்டி மீண்டும் அமைதியானது.</p><p>உடனடியாக சொல்ல வேண்டுமே என்று யோசித்த போது வீராணம் ஏரியின் காட்சி நினைவில் வரவே, "வீராணப் பேராழி" என்று சொன்னேன் - ஆழி என்றால் கடல். கடல் போன்ற ஏரி. இந்த வரி பரவாயில்லையா? என்று கேட்டேன். "OK..." என்று இழுவையாகப் பதில் வந்தது. வீடும் வந்து சேர்ந்தது!</p><p>இதை இதோடு விடாமல், இரவு வீடு திரும்பிய மகனிடம் விவரித்தேன். அவரோ "வீராணம் பரவாயில்லை. பேராழி என்பது மீட்டரில் உட்கார்ந்தாலும் எச மாரி என்பது போல் ஒலிக்கவில்லையே..." என்றார். உண்மைதான்! என்று சொல்லி விட்டு உறங்கிவிட்டேன்!</p><p>இன்று பேருந்தில் ஊருக்குச் செல்லும் போது மீண்டும் யோசித்து "வீராணக் கடலோடி" என்று தீர்மானித்து வைத்திருக்கிறேன். பொன்னி நதி பாக்கணுமே - வீராணக் கடலோடி என்று link ஆகிறது. இரவு வீடு திரும்பியதும் மகனிடம் சொல்லவேண்டும்.</p><p>இதையும் பாருங்கள் இதோடு விடாமல் உங்களிடம் பகிர்ந்து விட்டேன்! </p><p>நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்களோ??</p><p>அடடா....</p><p>இப்போது பார்த்தால் "வீழாது புலிக்கொடி" என்று மேலும் ஒரு எண்ணம் தோன்றுகிறதே.... (கொடியை கொஞ்சம் இழுத்துப் பாடாக்கூடாதா என்ன? சில இடங்களில் விட்டுக் கொடுக்காதா என்ன மெட்டு?) </p><p>BTW, விடுதலைப் புலிகள் என்று எண்ணி விடுவார்களோ என்று கேட்பவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன் -</p><p>"சோழர் காலத்தில் ஏதய்யா விடுதலைப் புலி?!"</p>மோ.சி. பாலன்http://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5825643978610235201.post-38397097317487798602022-09-10T00:02:00.003-07:002022-09-10T00:02:33.207-07:00டாஸ்மாக்-அ மூடுங்களேன்<p><br /></p><p><br /></p><p>(REMIX of மச்சானைப் பாத்தீங்களா)</p><p>- பாலா சிவசங்கரன்</p><p><br /></p><p>10 செப் 2022</p><p>-------*****--------</p><p><br /></p><p>ஐயா சாமிங்களா.....</p><p>ஐயா சாமிங்களா.....</p><p>ஐயா சாமிங்களா.....</p><p><br /></p><p>டாஸ்மாக்-அ......</p><p>டாஸ்மாக்-அ......</p><p>டாஸ்மாக்-அ மூடுங்களேன்</p><p>நம்ம தமிழ்நாடு தலை தூக்கணும்</p><p>குடிகாரன் வீடு</p><p>கொடை சாய்ஞ்சு போச்சு</p><p>அநியாயம் நிறுத்துங்களேன்</p><p>உங்க குலம் வாழ வாழ்த்து சொல்வேன்🙏</p><p><br /></p><p>அள்ளி வெச்ச புன்னகையில்</p><p>கொள்ளி வெச்ச கோலமென்ன?(2)</p><p>அதிகாரக் கனவான்களே</p><p>நீங்க எதையாச்சும் பண்ணுங்களேன்</p><p>குடிமக்கள் வாழ்க்கை</p><p>குடியாலே போச்சு</p><p>சரி செஞ்சு காட்டுங்களேன்</p><p>உங்க குலம் வாழ வாழ்த்து சொல்வேன் 🙏</p><p><br /></p><p>கல்யாணம் பேசித் தாய் வீட்டில் தந்த</p><p>தங்க நகைதான்</p><p>தாராந்து போச்சே...(2)</p><p>மணமேடையிட்டு மாங்கல்யம் தந்த</p><p>மன்னாதி மன்னன்</p><p>குடிகாரனாக</p><p>குடிகாரனாக</p><p>ஊர்கோல மேகங்களே</p><p>அவரைக் கண்டாக்கா சொல்லுங்களேன்</p><p>டாஸ்மாக் வாசல் தரைமீது யாரு?</p><p>தெரு நாயைக் கேளுங்களேன்</p><p>அது அவர் தானா சொல்லுங்களேன்... </p><p>(டாஸ்மாக்-அ மூடுங்களேன்</p><p>நம்ம தமிழ்நாடு தலை தூக்கணும்)</p><p><br /></p><p>சேரமன்னனோ இமயத்தை வெல்ல</p><p>சோழமன்னனோ கடல்தாண்டிச் செல்ல(2)</p><p>பால் தந்த மார்பை</p><p>வாள் கொண்டு வெட்டி</p><p>தாய்தந்த வீரம்</p><p>வேரத்துப் போச்சே...</p><p>வேரத்துப் போச்சே...</p><p>தமிழ் நாட்டு சொந்தங்களே</p><p>கொஞ்சம் செவி சாய்ச்சிக் கேளுங்களேன்</p><p>இயல்பான வீரம் ரத்தத்தில் இருக்கு</p><p>அதை மீட்டுக் காட்டுங்களேன்</p><p>உங்க குலம் வாழ வாழ்த்து சொல்வேன் 🙏</p><p><br /></p><p>(டாஸ்மாக்-அ மூடுங்களேன்</p><p>நம்ம தமிழ்நாடு தலை தூக்கணும்)</p><p><br /></p><p>நன்றி:</p><p>இசைஞானி இளையராஜா</p><p>கவிஞர் பஞ்சு அருணாசலம்</p>மோ.சி. பாலன்http://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5825643978610235201.post-71410062802718415572022-08-26T10:02:00.000-07:002022-08-26T10:02:23.565-07:00கறிவேப்பிலைக்கு காசு இல்லையடா<p>கறிவேப்பிலைக்கு (REMIX: புது மாப்பிள்ளைக்கு)</p><p><br /></p><p>கறிவேப்பிலைக்கு காசு இல்லையடா</p><p>அந்த கொத்தமல்லி தான் ஓசி இல்லையடா</p><p>எந்தக் காய்கறியும் இளசா எடுப்பா</p><p>வெண்டைக் காயினைத் தான் உடைக்காதிருப்பா</p><p>பளபளப்பா</p><p>இருப்பதெல்லாம் மருந்து அப்பா</p><p><br /></p><p>காய்கறியில் மன்னன்</p><p>கத்தரிக்காய் அண்ணன்</p><p>நீல நிறக் கண்ணன்</p><p>பம்பாயிலே பைங்கன்</p><p>பொங்கலுக்கு கொத்சு தான்</p><p>பிரியாணிக்கு தொக்கு தான் </p><p>ரபாரபா ரப்பப்பா</p><p>ரிபி ரிபி ரிப்பிப்பி</p><p>கத்தரிக்காய் முத்திப் போனா</p><p>அத்த நீயும் வத்தல் போடு</p><p>கத்தரிக்காய் சொத்தை ஆனா </p><p>அத்த நீயும் வெட்டிப் போடு</p><p>கூட்டு பொரியல் வறுவல் என்றே</p><p>விதவிதமாக சமைத்திடப்பா</p><p>மரபணுவில் மாற்றம் செஞ்சா</p><p>தடுத்திடப்பா</p><p><br /></p><p>உச்சி முதல் பாதம்</p><p>அத்தனையும் லாபம்</p><p>தண்டு இலை காயும்</p><p>பூவும் விலையாகும்</p><p>நாரெடுத்து பூ கட்டு</p><p>சேலை நெஞ்சி நீ கட்டு</p><p>ரபாரபா ரப்பப்பா</p><p>ரிபி ரிபி ரிப்பிப்பி</p><p>கல்யாணம் தான் ஆவணி மாசம்</p><p>வாழைமரம் தோரணம் ஆகும்</p><p>சீர்வரிசை சீதனம் ஆகும்</p><p>சாமிக்கும் நிவேதனம் ஆகும்</p><p>தமிழர்கள் வாழும் தேசமெல்லாம்</p><p>பழமென்றால் அது வாழையப்பா</p><p>வாழையடி வாழையென வாழ்ந்திடப்பா!</p>மோ.சி. பாலன்http://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5825643978610235201.post-45773332002958974142021-12-09T08:59:00.000-08:002021-12-09T08:59:03.977-08:00REMIX இது. ORIGINAL எது? #14<p>என் விருப்பம் தான்</p><p>உலகம் மொத்தம் தான்</p><p>சொந்தமாய்... இருக்க... நினைத்தேனே,</p><p>அதை, நிலத்தை வெச்சு,</p><p>நிறத்தை வெச்சு,</p><p>இனத்தை வெச்சுத்தான்,</p><p>பிரித்து விட்டுப் போனாரே....... </p><p><br /></p><p>(நாடுகள் எதற்கு? ராணுவம் எதற்கு? ஜெனரல் திரு பிபின் ராவத் அவர்களின் மறைவினால் மனம் வலிக்க எழுதியது)</p>மோ.சி. பாலன்http://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5825643978610235201.post-6408221999447202252021-11-24T23:32:00.004-08:002021-11-24T23:32:35.325-08:00REMIX இது. ORIGINAL எது? #13<p><br /></p><p>விளிம்பு நிலை மனிதர் உயர வழி கேட்டார்</p><p>உழைப்பில் உயர்வு இல்லை</p><p>உயர்வில் நியாயம் இல்லை</p>மோ.சி. பாலன்http://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5825643978610235201.post-41000712025554816222021-10-20T23:44:00.003-07:002021-10-20T23:44:24.082-07:00விஷமுங்கோ<p> மலைமலையாய் மாம்பழங்கோ</p><p>மருந்து வச்ச மாம்பழங்கோ</p><p><br /></p><p>பளபளக்கும் பப்பாளிங்கோ</p><p>கல்லு வச்ச பப்பாளிங்கோ</p><p><br /></p><p>குவிச்சு வெச்ச கொய்யாங்கோ</p><p>கெமிக்கல் வெச்ச கொய்யாவுங்கோ</p><p><br /></p><p>குலை குலையா </p><p>திராட்சைங்கோ</p><p>மருந்து தெளிச்ச</p><p>திராட்சைங்கோ</p><p><br /></p><p>மழமழன்னு ஆப்பிளுங்கோ</p><p>மெழுகு போட்ட</p><p>ஆப்பிளுங்கோ</p><p><br /></p><p>ஏழைக்கேத்த பழமுங்கோ</p><p>எங்க வாழைப்பழமுங்கோ</p><p>பாழும் வயிற்றைக்</p><p>கெடுக்கவே ஸ்ப்ரே</p><p>அடிச்ச பழமுங்கோ</p><p><br /></p><p>நல்ல உணவு நாமும் தின்னு</p><p>நாப்பது வருசம் ஆச்சுங்கோ</p><p><br /></p><p>சோத்துலயும் விஷமுங்கோ</p><p>கொழம்புலயும்</p><p>விஷமுங்கோ</p><p>கறியும்மீனும்</p><p>விஷமுங்கோ</p><p>காய்கறியும்</p><p>விஷமுங்கோ</p><p>கடைசியிலே</p><p>பாக்கப் போனா</p><p>கனிஞ்ச பழமும்</p><p>விஷமுங்கோ</p><p><br /></p><p>விஷத்தைத் தின்னு</p><p>வாழும் மனுசன்</p><p>நல்லவனாவது</p><p>எப்படிங்கோ?</p>மோ.சி. பாலன்http://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5825643978610235201.post-36868856457033442152021-10-17T02:08:00.004-07:002021-10-17T02:08:49.408-07:00காதோரம் நரையிருக்கு #REMIX<p> Caution 60+ #REMIX</p><p>(காவேரிக் கரையிருக்கு மெட்டு)</p><p><br /></p><p>காதோரம் நரையிருக்கு</p><p>கழுத்தோரம் திரையிருக்கு</p><p>நடையினிலே தளர்விருக்கு</p><p>நிமிர்ந்து நின்னா வலியிருக்கு</p><p>பஞ்சு போல முடியிருக்கு</p><p>அஞ்சு வயசு சிரிப்பிருக்கு</p><p>பல்லிரண்டு விழுந்திருக்கு</p><p>பிள்ளைகள் போலே மனசிருக்கு</p><p><br /></p><p>என்னம்மோ போலிருக்கு</p><p>எப்படியோ உடம்பிருக்கு</p><p>காலையிலே தின்ற வடை</p><p>மாலை வரையில் நினைவிருக்கு</p><p>காபிக்கு சர்க்கரை இல்லை</p><p>சர்க்கரைப் பொங்கல் குக்கரில் இல்லை</p><p>ராத்திரியில் தூக்கமில்லை</p><p>கண் திறந்தும் ஆசையில்லை!</p><p><br /></p><p>பஸ்ஸினிலே இடமிருக்கும்</p><p>ஏறுவதற்குள் நிரம்பிவிடும்</p><p>நிற்கும் நம்மைப் பார்த்தவுடன்</p><p>இளசுகள் எழுந்து இடம் கொடுக்கும்</p><p>ப்ரதர் என்ற வார்த்தை</p><p>பெரியவர் என்று மாறிவிடும்</p><p>அண்ணன் என்று சொன்னவரும்</p><p>அங்கிள் என்று சொல்ல வரும்</p><div><br /></div>மோ.சி. பாலன்http://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5825643978610235201.post-26194375810062092392021-10-14T20:16:00.005-07:002021-10-14T20:18:05.847-07:00கட்டுக்குள் அடங்காதவை<p> செரிமானமாகாத அவமானங்களை </p><p>அசைபோட்டுக் கொண்டிருக்கும்போதே</p><p>புதிதாய் ஒன்று நிகந்துவிட</p><p>தூரவரிசையில் மேலும் பல நிற்பதுபோல்</p><p>துணுக்குற்று ஒடுங்குகின்றது மனம்</p><p><br /></p><p>பொறுமை எனும் ஆமை ஓடு</p><p>கவசமா இல்லை அவமானமா?</p><p>என்ற கேள்விக்கு</p><p>சுமை என்று வருகின்றது விடை</p><p><br /></p><p>ஊர்-வதை அஞ்சி ஊர்வதை</p><p>வீழ்ச்சியென்றால் வருத்தம் வரக்கூடும்.</p><p>பதுங்குதலென்று கொள்வோம்...</p><p><br /></p><p>மடித்து எழுதிய கட்டுக்குள் அடங்காத</p><p>காயங்களைக் காட்டவும் முடியாமல்</p><p>மறைக்கவும் முடியாமல்</p><p>தவிக்கின்றன வரிகள்</p><p>-பாலா சிவசங்கரன்</p><p>14 10 2020</p>மோ.சி. பாலன்http://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5825643978610235201.post-42371190717383425392021-10-03T20:16:00.006-07:002021-10-03T20:18:53.412-07:00REMIX இது. ORIGINAL எது? #12<p> பாலாற்றின் கரையிலே</p><p>வெகு நாளாக மரமொன்று</p><p>அதன் வேரும் புண்ணானது</p><p>சுடும் மண்ணில் திண்டாடுது</p><p><br /></p><p>அங்கே ஒரு பாலம்</p><p>ஆற்றைத் தாண்டிப் போகும்</p><p>இங்கே இது பாவம்</p><p>நீருக்கெங்கே போகும்?</p><p>பூமிக்குள்ள இல்லாதத</p><p>வானத்திடம் மன்றாடுதோ?</p><p>காற்றுக்குள்ள இல்லாதத</p><p>கடலில் எடுக்க வாதாடுதோ?</p><p>வானம் காயுது</p><p>அதுதானே பொழியுது?</p><p>மரமும் காயுது</p><p>அதுதானே காய்க்குது?</p><p>மரம் இன்றி நிழல் ஏது?</p><p>மணல் இன்றி நதி ஏது?</p>மோ.சி. பாலன்http://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5825643978610235201.post-63671696252294925422021-09-25T08:07:00.005-07:002021-09-25T20:41:25.870-07:00புரட்டாசி புலம்பல்<p>(சிவகாமி நெனைப்பினிலே மெட்டு)</p><p>மனைவி: பிரியாணி நெனைப்பினிலே சாதம் தின்ன மறந்ததென்ன?</p><p>கணவன்: புரட்டாசி மாசத்திலே நான்வெஜ் செய்ய மறுப்பதென்ன?Drum-க்குள்ளே தட்டுவியே... மண்வெட்டிபோல் வெட்டுவியே...</p><p>மனைவி: கொஞ்சம் பொறுத்துக்கோ புலம்பலை நிறுத்திக்கோ.. மாசம் முடிஞ்சதும் மாமிசம் எடுத்துக்கோ..</p><p>சரணம்-</p><p>கணவன்: மாலை முடிஞ்சாலே பாலைத் தயிராகத் தோய்க்கிற... உறை ஊத்துற... காலை விடிஞ்சாலே காயைக் கறியாக ஆக்குற கடுப்பேத்துற...</p><p>மனைவி: சான்ட்விச் கொடுத்தாலே ஆம்லெட் தரச்சொல்லிக் கேக்குற... என்ன பாக்குற...? காயை நறுக்காமல் டீயை வடிக்காமல் ஏய்க்குற... டபாய்க்குற....</p><p>கணவன்: போதும் இது போதும் எந்தன் வேதனை உனக்கிங்கு புரியாதா? மாதம் ஒரு மாதம் அதன் பெயரினை மாற்றிட முடியாதா?</p><p>மனைவி: தம்ம் கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ... தம்ம் ஆனதும் வெட்டிக்கோ வெட்டிக்கோ !!</p><p><br /></p><p><br /></p>மோ.சி. பாலன்http://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5825643978610235201.post-76265830804453769042021-09-18T09:23:00.005-07:002021-09-25T09:40:36.507-07:00 REMIX இது. ORIGINAL எது? #11<p>தாய் மடியில் கன்னுக்குட்டி கன்னுக்குட்டி கன்னுக்குட்டி</p><p>அடடா முட்டுது மல்லுக்கட்டி மல்லுக்கட்டி மல்லுக்கட்டி</p><p>நாளெல்லாம்.... </p><p>பசு மேய்ந்தாலும்....</p><p>பாலெல்லாம்.... </p><p>மடி சேர்ந்தாலும்...</p><p>அடி அம்மா மொத்தமும் தான் </p><p>தினம் சந்தைக்குச் சென்றதம்மா</p><p>பசியில்---</p><p>தாய் மடியில் கன்னுக்குட்டி கன்னுக்குட்டி கன்னுக்குட்டி</p><p>அடடா முட்டுது மல்லுக்கட்டி மல்லுக்கட்டி மல்லுக்கட்டி</p><p><br /></p><p>#VeganSong</p>மோ.சி. பாலன்http://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5825643978610235201.post-64446160533017844302021-08-27T20:50:00.000-07:002021-08-27T20:50:02.189-07:00REMIX இது. ORIGINAL எது? #10<p> அன்னையென்று வந்தவளே</p><p>ஆருயிரைத் தந்தவளே</p><p>ஆதரிக்க யாருமின்றி</p><p>தன்னந்தனி ஆனவளே</p><p>கொஞ்சிக் கொஞ்சி வளர்த்தவர்கள்</p><p>உன் நெஞ்சைப் பிளந்ததும் ஏன்?</p><p>அன்னை அஞ்சிக் கிடக்கணுமோ?</p><p>உயிர் எஞ்சிப் பிழைக்கணுமோ?</p><p>இந்த பூலோகம் பாழாகிப் போனதோ?</p><p>அந்த மேலோகம் மேலாகத் தோணுதோ?</p>மோ.சி. பாலன்http://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5825643978610235201.post-79614338469435368822021-08-21T09:47:00.003-07:002021-08-21T09:47:18.771-07:00ஒரு வெங்கலப் பானைக்குள்ளே!<p> </p><p dir="ltr"><a href="https://youtu.be/MW9eSckmiA4">https://youtu.be/MW9eSckmiA4</a></p>
<p dir="ltr">ஒரு வெங்கலப் பானைக்குள்ளே<br />
வெண்பொங்கலும் வேகையிலே....!<br />
அந்த சந்தடிச் சாக்கினிலே<br />
இங்கு முந்திரி காணலையே<br />
கடைக்குச் சென்று முந்திரியை வாங்கிடும் வேளையிலே<br />
பருப்பும் வெந்து பொங்கலும் தான் குழையுது பானையிலே<br />
சொந்த பந்தம் வாரீரோ<br />
சுடும் பொங்கல் உண்ண வாரீரோ..?!<br />
நாட்டுப் பசு நான் கறந்து<br />
பாலைக் காய்ச்சித் தானே நெய் எடுத்தேன்; நெய் எடுத்தேன் <br />
நானெடுத்த நெய்யினிலே நாலு அஞ்சு ஸ்பூனை நானும் விட்டேன்<br />
நானும் விட்டேன்<br />
அம்மாடி தாளிப்பின் வாசம் இங்கே நாசியை விட்டு நீங்கிடுமோ?<br />
அஞ்சாறு மணிநேரம் நெய்யின் வாசம் நாவினை விட்டு நீங்கிடுமோ?<br />
கொதிக்கின்ற பொங்கல் விரைவில் ஆறாதோ?<br />
ருசிக்கின்ற பெண்கள் விரலும் நோகாதோ?<br />
மகிழம் பூவே எந்தன் மணிமுத்தே<br />
நிழலைப்போலே உள்ள மிளகை மென்று பாரு காரத்தெ காரத்தெ!</p>மோ.சி. பாலன்http://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5825643978610235201.post-46992621717363037522021-08-20T19:29:00.005-07:002021-08-20T19:29:28.590-07:00REMIX இது. ORIGINAL எது? #9<p>இயற்கையும் மீளுமோ...?செயற்கையும் ஓயுமோ...?இதுவரை அழித்தது அது மட்டும் போதும் இருக்கட்டும் மீதம்</p><p>கல்லாகும் குறிஞ்சி</p><p>முள்ளாகும் முல்லை</p><p>மண்ணாகும் மருதம்</p><p>நஞ்சாகும் நெய்தல்</p><p>வளமான பூமி</p><p>அதுவாகும் பாலை</p><p>நலமாக நாளை</p><p>விடியாதோ காலை?</p><p>போனது போகட்டும்</p><p>ஏனிந்தத் துன்பம்?</p><p>மீண்டும் வேண்டும் இன்பம்.</p>மோ.சி. பாலன்http://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5825643978610235201.post-36868880657307373882021-08-19T18:11:00.002-07:002021-08-19T18:11:14.737-07:00REMIX இது. ORIGINAL எது? #8<p> </p><p>மரகத வானம்</p><p>மகரந்த மேகம்</p><p>மரங்களின் தாகம்</p><p>மண்மீது தீர்க்கும்</p><p><br /></p><p>தகுந்த காலத்தில் தருகின்ற தானம்</p><p>தயை நீ புரிந்தால் தழைத்திடும் யாவும்</p><p>மழையெனும் அமுதமும் கரும்பினில் சேரும்</p><p>எந்திர லோகத்தில் சர்க்கரை ஆகும்!</p>மோ.சி. பாலன்http://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5825643978610235201.post-56674919437376454802021-08-09T19:15:00.001-07:002021-08-09T19:17:13.801-07:00மனிதன் ஏமாந்தான்<p>(கம்பன் ஏமாந்தான் பாடலைத் தழுவி. நன்றி: கவியரசர்)</p><p><br /></p><p>மனிதன் ஏமாந்தான் இந்த உலகத்தையே அவன் தனதென்றானே கற்பனை செய்தானே... மனிதன் ஏமாந்தான்.</p><p><br /></p><p>கம்பு கழி என்று ஏன் கொண்டான்? பிற உயிர்களை வதைத்தானே... அவன்</p><p>ரம்பங்கள் கோடரி ஏன் செய்தான்? தினம் மரங்களை அறுத்தானே</p><p><br /></p><p>தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்</p><p>தீபத்தின் பெருமையன்றோ? அந்த</p><p>தீபத்தினால் ஒரு கானகம் எரித்தால்</p><p>தீபமும் பாபமன்றோ?</p><p><br /></p><p>வேடர்கள் உழவர் பல தொழில் செய்வோர் சமநிலை சிதைத்தாரே அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட நானும் சேர்ந்தேனே...</p><p><br /></p><p>ஆத்திரமென்பது மனிதனுக்கென்றும் அடங்கவே அடங்காதோ?</p><p>அவன் ஆதிக்கத்தால் மண்ணில் பாதிப்பு வந்தால் அடங்குதல் முறைதானே?</p><p>-பாலா சிவசங்கரன்</p><p> 10 ஆகத்து 2021</p><p><br /></p><p><br /></p>மோ.சி. பாலன்http://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5825643978610235201.post-67754895074810271322021-08-03T12:00:00.006-07:002021-08-03T12:05:08.290-07:00மொச்சை விழி!<div style="text-align: left;">பெண்: பச்சைத் தமிழா, பச்சைத் தமிழா,<br />பசைபோல் உனை நான் ஒட்டிக்கொள்ளவா?<br />ஆண்: மொச்சை விழியே, மொச்சை விழியே,<br />மசிபோல் உன்னை நான் தொட்டுக் கொள்ளவா?</div><div style="text-align: left;"><br />பெண்: உச்சிக் கிளையே, உச்சிக் கிளையே <br />கனிபோல் உன்னில் நான் ஒட்டிக் கொள்ளவா?<br />ஆண்: இச்சைக் கனியே, இச்சைக் கனியே <br />கிளிபோல் உன்னை நான் கொத்திச் செல்லவா?</div><div style="text-align: left;"><br />ஆண்: செப்புச்சிலையே, செப்புச்சிலையே<br />செப்ப ஒரு செய்யுள் நான் சொல்லித் தரவா?<br />பெண்: மெச்சும் கவியே, மெச்சும் கவியே,<br />கச்சையென உன்னை நான் கட்டிக் கொள்ளவா?! </div>மோ.சி. பாலன்http://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5825643978610235201.post-21583656288959886722021-07-23T10:04:00.003-07:002021-07-23T10:04:46.021-07:00REMIX இது. ORIGINAL எது? #7<p> REMIX இது. ORIGINAL எது? #7</p><p><br /></p><p>ஆயிரம் கிளிகளே அமருங்கள்</p><p>விழுதில் ஊஞ்சல் ஆடுங்கள்; பாடுங்கள்</p><p>கனிகள் நூறு காணுங்கள்</p><p>இலைகளும் இறகைப்போல்</p><p>பசுமை வண்ணம் பாருங்கள் பாருங்கள்</p><p><br /></p><p>Found the following video to be a good fit for above lines. Thanks to the video creator.</p><p>https://youtu.be/alvuVpb8Ydk</p><div><br /></div>மோ.சி. பாலன்http://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5825643978610235201.post-1793923550863415582021-07-20T06:27:00.005-07:002021-07-20T06:30:06.930-07:00REMIX இது. ORIGINAL எது? #6<p>REMIX இது. ORIGINAL எது? #6</p><p>மண் பாடும் பாடல்:</p><p>பல்லவி, இந்த ரீமிக்ஸ் பாடலின் கருத்துக்கும் பொருந்துவதால் அப்படியே வைத்துக் கொள்ளலாம்.</p><p>(சரணம்)</p><p>பருவம் பொய்த்துப் போகும் போது</p><p>பயிரும் அழுகின்றது</p><p>பருவம் தவறிப் பொழியும் போது</p><p>பயிரும் அழிகின்றது</p><p>என்ன நினைத்து என்னைக் கெடுத்தான்</p><p>மனிதன் என்பவனே</p><p>மண்ணைக் கெடுத்து தன்னை வளர்த்த</p><p>மனிதன் கொடியவனே</p><div><br /></div>மோ.சி. பாலன்http://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5825643978610235201.post-42011137904568561322021-07-12T23:03:00.000-07:002021-07-12T23:03:07.991-07:00REMIX இது. ORIGINAL எது? #5<p> REMIX இது. ORIGINAL எது? #5</p><p><br /></p><p>இதில் கண்டு பிடிக்க ஒன்றும் இல்லைங்க. எல்லோருக்கும் தெரிந்த பாடல் தான். மீளாற்றலூற்றுகளைப் (renewable sources of energy) போற்றும் எண்ணத்தில் எழுதியுள்ளேன்.</p><p>*****</p><p>ஆத்தாடி காற்றால(லை) காத்தாட ...</p><p>காற்றால இறகெல்லாம் கூத்தாட ....</p><p>காத்தாட அது கூத்தாட...</p><p>கொதிக்குது பூமி வேர்த்து... ஏ...</p><p>அதக் கொஞ்சம் ஆத்து ஆத்து...</p><p><br /></p><p>கொடி மலர் மேவும் குளிர்க் காற்றும் விலகாதோ? </p><p>அது காற்றாலை இறகோடு சுழலாதோ?</p><p>விலகாதோ... வந்து சுழலாதோ?</p><p>கரியமில வாய்வாலே பல தோஷம் தான்</p><p>அதனாலே பாழாச்சு பல தேசம் தான்</p><p>இந்த பூலோகமே...எஎஎஏ ஏஏஏ...</p><p>துருவங்கள் உருகாமல்</p><p>கடல்மட்டம் உயராமல்</p><p>நகரங்கள் முழுகாமல் காப்பாற்றுவோம்..</p>மோ.சி. பாலன்http://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5825643978610235201.post-23742019129596704312021-07-11T19:29:00.002-07:002021-07-11T19:29:16.445-07:00REMIX இது. ORIGINAL எது? #3,4<p><br /></p><p>3.</p><p>நீரில்லாமல் நாடில்லை</p><p>தானே பயிர்கள் வளர்வதில்லை</p><p>நதிகளை யார் தடுக்கின்றார்?</p><p>அடுத்தவர் வயிற்றில் அடிக்கின்றார்..</p><p><br /></p><p>4.</p><p>ஆறிருக்கும் அணையிருக்கும்</p><p>கடந்து வராது</p><p>குடகினிலே நதி பிறக்கும்</p><p>குடந்தை வராது</p><p>நாலு வகைப் பயிர் வளர்க்கும்</p><p>ஆசை விடாது </p><p>நஞ்சை நிலம் தஞ்சையிலே தழைக்க விடாது</p><p><br /></p><p><br /></p>மோ.சி. பாலன்http://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5825643978610235201.post-4226709795828656422021-07-10T23:07:00.006-07:002021-07-10T23:07:39.035-07:00REMIX இது. ORIGINAL எது? #2<p> REMIX இது. ORIGINAL எது? #2</p><p><br /></p><p>நட்டால் மரம் வளரும்</p><p>நடாமல் நாம் மறந்தோம்</p><p>விட்டால் நீர் சுரக்கும்</p><p>விடாமல் நாம் அகழ்ந்தோம்</p><p>மனிதன் தொடாமல் உலகில் எந்நாளும் இயற்கை கெடுவதில்லைவ</p><p>ளங்கள் கெடாமல் வளர்ச்சி உண்டானால் உயிர்கள் அழிவதில்லை</p>மோ.சி. பாலன்http://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5825643978610235201.post-12545758821792378652021-07-10T01:06:00.002-07:002021-07-10T01:06:23.417-07:00REMIX இது. ORIGINAL எது? #1 <p>REMIX இது. ORIGINAL எது? #1 </p><p>ரீமிக்ஸ் கவிஞர்களின் அவஸ்தைகள் பற்றி சில நாட்களுக்கு முன்பு எழுதியிருந்தேன். எந்த வரியைப் படித்தாலும் கேட்டாலும் அதை ஒரு பாடலின் ட்யூனில் பொருத்திப் பார்ப்பது என்பதுதான் அந்த அவஸ்தை. </p><p>அதே போல் எந்த ஒரு நல்ல பாடலைக் கேட்டாலும் இந்த ட்யூனுக்கு இன்னும் சிறப்பாக நான் எழுதுவேனாக்கும் என்று வரிந்து கட்டுவது இவர்களின் இன்னொரு அவஸ்தை. இதில் பெரும்பாலும் கிடைப்பது தோல்வியே! வாலிக்கும் வைரமுத்துவுக்கும் tough கொடுக்க நினைப்பது எவ்வளவு சிறுபிள்ளைத்தனமான செயல் என்பதை இவர்கள் சிறிதும் சிந்திப்பதில்லை. உதாரணமாக கவிச்சிற்பி கங்கை அமரன் (நான் கொடுத்த பட்டம் தானுங்க. நல்லா இருக்கா?) அவர்கள் எழுதிய "மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ?" என்ற அற்புதமான பாடலைக் கெடுத்து "கண்ணில் இந்தப் பார்வையின்றி யாரும் பார்த்தல் கூடுமோ?" என்று அற்பமாக எழுத ஆரம்பிப்பார்கள்! இதில் ஒரு ஆறுதல் என்னவென்றால் இவர்கள் இந்த அற்ப முயற்சிகளை அற்பம் என்று புரிந்து கொண்டு கமுக்கமாக trash செய்து விடுவதுதான்!</p><p>Recycling the waste என்ற உயரிய நோக்கில் எனது trash folder-லிருந்து சில remix முயற்சிகளை இங்கு எழுதி, original பாடலை உங்களால் கண்டு பிடிக்க முடிகிறதா என்று விளையாடலாம் என்று தோன்றியது. விளையாட்டு பிடித்திருந்தால் தொடரலாம்.</p><p>கீழ்க்கண்ட remix-ன் original பாடல் எது?</p><p>"கண்டதும் கொன்றானடி பாவி</p><p>புல்லட்டையே எடுத்து...</p><p>Gun-க்குள்ளே தொடுத்து...</p><p>கண்டதும் கொன்றானடி"</p><p>முதல் போட்டி என்பதால் எளிமையாக ஆரம்பிப்போம்!</p>மோ.சி. பாலன்http://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.com4