Wednesday, June 15, 2016

கடலை முத்து

கடல் முத்தா என்னயுந்தான்
பொத்திப் பெத்து வளர்த்தவளே
கடலை முத்தா நானும் இப்போ
கசங்கிப் போயி நிக்குறேனே

ஒடச்ச தோலா உன்னையுந்தான்
ஓரத்துல தள்ளிவிட்டு
எண்ணெயைப் போல்
என்னைப் பிழிஞ்சி
யார் யார்க்கோ வார்த்துவிட்டு
புண்ணாக்கா நிக்குறேனே

பெத்த வயித்தை ஒருநாளும்
பசியாத்தி விட்டதில்ல
பால் குடிச்ச மார்மேல
சேலை வாங்கிப் போர்த்தவில்ல
சோறு போட்ட கையக் கொஞ்சம்
சுளுக்கெடுத்தும் விட்டதில்ல

சாரயத்தக் குடிச்சிப்புட்டு
தோராயமா வீடு வந்தா
செருப்பெடுத்து அடிக்காம
சோறாக்கிப் போடுறியே