Thursday, August 9, 2012

வள்ளல்

தடம் படர்ந்த முல்லைக்குப்
பரி நீக்கித் தேர் தந்த பாரி;
பனி படர்ந்த மயிலுக்கு
ஜரி வைத்த போர்வை தந்த பேகன்;
மாயவனின் மர்மம் அறிந்தும்
தர்ம பலன் தர்மம் செய்த கர்ணன்;
ஆடவரில் வள்ளல்கள் இவர்போல் பலருண்டு.

பார்வையில் உறவு தந்து,
ஸ்பரிசத்தில் உரிமை தந்து,
உள் வளரும் குழந்தைக்கு
உடலோடு உயிரும் தந்து,
மார் கசியப் பால் ஊட்டி,
வெறும் காம்பில் அன்பூட்டும்
பெண்களில்
வள்ளல் என்று தனியாய் யாருமில்லை.