Tuesday, April 8, 2014

இராம நவமி

மாமுனி சொல் கேட்டு வில் முறித்தாய்
தசரதன் சொல் கேட்டு முடி துறந்தாய்
வைதேகி சொல் கேட்டு மான் தொடர்ந்தாய்
சுக்ரீவன் சொல் கேட்டு வாலி வதைத்தாய்
கொடியதோர் குடி சொல் கேட்டு
துணைவியைத் தீ விதைத்தாய்
சொல்வார் சொல் கேட்பவன் ராமனென்று
யானும் உன்னை நிந்திக்கவோ?
நீ வந்துதித்த இந்நாளில்
நீ வந்துதித்த என் நெஞ்சில்
நாட்டம் வேறொன்றும் இல்லை
நின் நாமம் பகர்தலன்றி
ராமா ராமா ராமா