Monday, November 12, 2012

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

எஞ்சியிருந்த எம் மரத்துக் காகங்கள்
அஞ்சியிருந்து எம்மரத்தில் உறங்கியனவோ...
வாலாட்டும் தெரு நாய்கள்
காலிடுக்கில் வாலொடுக்கி
எங்கோடி ஒளிந்தனவோ...
பட்டாசுகள் வெடித்து
மனிதர் நாம் மகிழ்கையில்..

வெளிப்புகை ஒவ்வாமல்
வீட்டில் அடங்கிய கொசுக்களுடன்
தீபாவளி கொண்டாடி மகிழ்வோமாக.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.