Sunday, April 26, 2020

துளி நீர்


நீர்த்துளியாக விடுபட்ட
துளி நீர்,
நீர்த்துளிக்குள் சிறைப்பட்டதாகவே தவித்துப் போகின்றது

நிலையற்ற துளிகளையே
நாம் காண்கிறோம்-
தாமரை இலை மேலும்
மழையின் ஒழுக்கிலும்
விழிகளின் ஓரத்திலும்.

சந்தர்ப்ப சாதுர்ய சதிகளின்
நிகழ்தகவில்
சங்கமித்து சுயமிழக்கின்றன துளிகள் -
சமூகத்தின் தனி மனிதர்களைப் போலவே.

பாலா சிவசங்கரன்
26 04 2020