Showing posts with label அனுபமா கிருஷ்ணசாமி. Show all posts
Showing posts with label அனுபமா கிருஷ்ணசாமி. Show all posts

Tuesday, March 7, 2017

எழுவாய் எரிகின்ற நிலவாய்

We for We தன்னார்வ அமைப்பிற்காக பிரபல பின்னணிப் பாடகி அனுபமா கிருஷ்ணசாமி அவர்கள் ஆங்கிலப் பாடல் ஒன்றை இயற்றி இசையமைத்துப் பாடியுள்ளார். ( பாடலைக் கேட்க: https://soundcloud.com/chandralekhaa68/01-woman-theme-song-english )

இப்பாடலுக்குத் தமிழ் வடிவம் கொடுக்க அவர் விரும்பியபோது, தோழர் ராஜராஜன் அவர்கள் செய்த அறிமுகத்தால் கீழ்க்கண்ட வரிகளை எழுதினேன். மகளிர் தினத்தில் இவ்வரிகளை அரங்கேற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்.

எழுவாய் எரிகின்ற நிலவாய்
மொழிவாய் அதிரட்டும் முரசாய்
பெண்ணே நீ போரிட வா
வானும் மண்ணும் வெல்ல வா
உன்னோடு மோதிடுமா எந்த மலையும்?
சிறகை விரித்து வா

பெண்ணே உன் கனவென்ன?
கைவரும் பெரு வெற்றியே
வானமும் வெகுதூரமில்லை
சிகரம் பார் உன் சிறகை விரி

வா பெண்ணே வா
வா பெண்ணே வா
வா பெண்ணே வா

மின்னல் பிறக்கும் ஒளியாய் கண்கள்
ஜன்னல் திறந்த வெளியாய் எண்ணம்
உன்னுள்ளே தேடி எடு
உன்பேரும் கேட்கும் தனியே
உள்ளதை நீயும் கொடு
எந்த நொடியும் இனிக்கும் இனிமேல்

பெண்ணே உன் கனவென்ன?
கைவரும் பெரு வெற்றியே
வானமும் வெகுதூரமில்லை
சிகரம் பார் உன் சிறகை விரி

வா பெண்ணே வா
வா பெண்ணே வா
வா பெண்ணே வா