Thursday, December 12, 2019

இனிய புத்தாண்டு 2020 -:இளமை அதோ அதோ

என் வயதிற்கு இந்தப் புத்தாண்டில் "இளமை இதோ இதோ" பாடலை அப்படியே பாட முடியாது. அதனால் கீழ்க்'கண்டபடி' மாற்றியுள்ளேன்! சக வயது சகலைகள் சந்தோஷமாக இதைப் பாடலாம்!

*****
ஹாய் எவ்ரி படி
விஷ் யூ ஹேப்பி நியு இயர்

இளமை அதோ அதோ
இனிமை அதோ அதோ
காலேஜு டீன் ஏஜு் பெண்கள்
எல்லாம் என் பெண்ணோட friend-கள்
இளமை அதோ அதோ
இனிமை அதோ அதோ

ராஜா சாரின் ரசிகன்
பாலு ஜானு நேசகன்
கமல் படங்கள் பார்ப்பவன்
ரஜினி ஸ்டைலால் ஈர்ப்பவன்
நான் ஆடும் ஆட்டம் பாருங்கள்
பெல்பாட்டக்(bell bottom) காலங்கள்
நான் பாடும் பாட்டைக் கேளுங்கள்
SPB சாயல்கள்
ஊர் போற்றவே பேர் வாங்குவேன்
நான் தான் சகலைக்கெல்லாம் நல்லவன்!

இளமை அதோ அதோ
இனிமை அதோ அதோ

தமிழில் மட்டும் பாடுவேன்
இந்திப் பாட்டும் கேட்டுப்பேன்
மை முஜே கே லீயே
இதிலென்ன கேலியே?
தாய் பேசும் மொழியில் பேசம்மா
களத்தூரின் கண்ணம்மா
உனக்காகப் பாடும் நானும் தான்
கல்யாண ராமன் தான்
நாள் தோறுமே Smule பாடுவேன்
நான் தான் சகலைக்கெல்லாம் நல்லவன்!

இளமை அதோ அதோ
இனிமை அதோ அதோ

பைக் எடுத்து ஓட்டுவேன்
மைக் பிடித்துப் பாடுவேன்
சுற்றுவதில் சூரன் நான்
கத்துவதில் வீரன் நான்
புது ஆண்டில் சோகம் கிடையாது
மகிழ்ச்சிக்கு அளவேது?
நமை வெல்ல யாரும் கிடையாது
பகையென்று யார் கூறு?
நாள்தோறுமே கொண்டாட்டம் தான்
வா வா புது வருடம் போகலாம்!

இளமை அதோ அதோ
இனிமை அதோ அதோ

Tuesday, December 10, 2019

"குடி மற" பாடல்


"சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்" பாடல் மெட்டு
---------

குடித்துக் குடித்து குடல் கெடுத்துக் கொண்டாய்
உடல் மிடுக்கும் துடிப்பும் இன்று இழந்து நின்றாய்
படித்த படிப்பும் அதை மறந்து விட்டாய்
சபை நடந்து நடந்து வரும் தரம் இழந்தாய்

எழிலும் இழந்தாய் மொழியும் இழந்தாய்
தொழிலில் வரவும் இழந்தாய்
புழுவின் பெருமை எளிதில் அடைந்தாய்
தெருவில் தனியே நடந்தாய்

இளமை இழந்தாய் இனிமை இழந்தாய் புகழும் பணமும் இழந்தாய்
குடும்பம் இழந்தாய் குழந்தை இழந்தாய் குலத்தின் பெயரும் இழந்தாய்

#குடிமற

Sunday, December 8, 2019

ஐட்டம் சாங


இது ஒரு ஐட்டம் சாங். ஐட்டத்தின் பெயர் Tea!

அறிந்தும் அறியாமலும் படத்தில் வரும் "தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா" பாடல் மெட்டு
------
டீ குடிக்க டீ குடிக்க கேன்டீன் போலாம் வா
என் தலை ரொம்ப வலிக்குது
கேன்டீன் போலாம் வா
பிரேக் எடுத்து பிரேக் எடுத்து
வேலை செய்யலாம்
உன் மணி பர்ஸை மறக்காமல் கையில் கொண்டு வா
சால்ட்டு பிஸ்கட்டு அதைப் போட்டு நொறுக்கு
கோல்டு லிக்விடு அதை சூடா இறக்கு

சரணம்:
(நண்பனிடம்)
நண்பா, அந்த மெனுவைப் பார்த்து
நல்ல பிளேவர் தேர்வு செய்து ஆர்டர் செய்
(டீ போடும் பையனிடம்)
ஹே ப்ரோ, இதழ் பருக பருக
மனம் உருக உருக கொஞ்சம் தேநீர் செய்
பெருகுது பெருகுது நறுமணம்
நொறுங்குவது நொறுங்குவது நுரைமனம்!
இஞ்சிக்கு டீயுடன் திருமணம்!
மாலை மாற்றிடுதே...!
(Yes. Tea changes the evening)
ஓஹூ ஓஹூ ஹோ
ஒஹு ஒஹு ஓஹூ ஹோ!

#TeaSong
#Thanglish
#ThankYouYuvan

Saturday, November 30, 2019

சிறுமழைதான் பொழிகிறதே

மழைநீர் தேங்கிய தெருவில் இறங்கி நடக்கையில் தோன்றியது...
"முன் பனியா முதல் மழையா" நந்தா படப் பாடல் மெட்டு.

***************

சிறு மழைதான் பொழிகிறதே
என் தெருவில் நீர்தான் நிறைகிறதே
வழிகிறதே ஷூ நனைகிறதே...
வடியாத தெருவில் நின்றேன்
புரியாமல் இறங்கிச் சென்றேன்
மாற்றம் தருவது யார் தானோ?

ஒரு காலத்தில்.. ஒரு காலத்தில்
மழை பெய்தாலும் அதுவும் வடியுமடி
இந்தக் காலத்தில் இந்தக் காலத்தில்
மழை போகின்ற பாதை மறைந்ததடி
நடுவினில் குழிகளில் கால் படுமோ?
வழிவரும் வாகனம் சாய்ந்திடுமோ?
வாழ்கிறோம் நாம் நம் சென்னையில்...

என்றும் இயற்கையின் வழி நடக்கையில்
அது எப்போதும் நமக்கு நலம் தருமே
இன்று செயற்கையின் வழி நடக்கிறோம்
அது எப்போதும் நமக்கு இடர் தருமே
மழையையும் வெயிலையும் தாங்கிடுமோ?
மழலையும் முதுமையும் தான் நகுமோ?
மாறுமோ நாளை நம் சென்னையே...?


Monday, August 26, 2019

தமிழ் சொல்லாத நன்னெறியா?


(பனியில்லாத மார்கழியா பாடல் மெட்டு)

தமிழ் சொல்லாத நன்னெறியா?
தமிழில் இல்லாத தேன்சுவையா?
மழலையும் பேசத் தயங்கிடுமா?
மறந்துவிட்டால் அது தாய்மொழியா?

முயற்சியில்லாமல் முடிந்திடுமா?
பயிற்சியில்லாமல் தொடர்ந்திடுமா?
முயற்சியில்லாமல் முடிந்திடுமா?
பயிற்சியில்லாமல் தொடர்ந்திடுமா?
தமிழ் சொல்லாத பள்ளிகளா?
மழலைக்கு ஊட்டும் கள்ளிகளா?
மழலைக்கு ஊட்டும் கள்ளிகளா?
(தமிழ் சொல்லாத நன்னெறியா?)

இஷ் இல்லாமல் பெயரில்லையா?
இஷ்டம் இல்லாமல் தமிழ்ப்பெயரா?
இஷ் இல்லாமல் பெயரில்லையா?
இஷ்டம் இல்லாமல் தமிழ்ப்பெயரா?
கஷ்டமில்லாமல் புகுத்திவிட்டார்
நஷ்டமென்றால் அது நமக்கல்லவா?
நஷ்டமென்றால் அது நமக்கல்லவா?
(தமிழ் சொல்லாத நன்னெறியா?)

குலத்தினைக் காக்கும் தெய்வங்களும்
மொழியினைக் காக்க மறந்திடுமா?
குலத்தினைக் காக்கும் தெய்வங்களும்
மொழியினைக் காக்க மறந்திடுமா?
நிலத்தினை ஆளப் பிற இனமா?
நாவினை ஆளப் பிறன் மொழியா?
நாவினை ஆளப் பிறன் மொழியா?
(தமிழ் சொல்லாத நன்னெறியா?)

(கூடுதலாக இன்னொரு சரணம்)
படகில்லாத பாய்மரமா?
பார்வையில்லாமல் ஓவியமா?
படகில்லாத பாய்மரமா?
பார்வையில்லாமல் ஓவியமா?
நுகர்வில்லாத பூமணமா?
உணர்வில்லாத தமிழினமா?
உணர்வில்லாத தமிழினமா?
(தமிழ் சொல்லாத நன்னெறியா?)

பாலா சிவசங்கரன்
26 ஆக 2019


ஒரே ஒரு காரணம்
------------------

மேற்படி எனது பாடலைப் படித்த நண்பர்கள் சிலர், தம் மழலையருக்கு வடமொழிப் பெயர் வைத்துள்ளது குறித்தும் தமிழை விடுத்து இந்தி அல்லது பிற மொழியை இரண்டாவது மொழிப்பாடமாக வைத்துள்ளது குறித்தும் பேசினர் / வருந்தினர்.

குற்றம் சாற்றுவதும் குற்ற உணர்ச்சி கொள்வதும் எனது நோக்கமல்ல. எனது பாடல் இன்றைய நிலையை எடுத்துரைக்கிறது. இன்றைய நிலையின் புரிதலுடன் மேல் நகர்வோம். இது வரை செய்த தவறுகளை அடுத்த ஒரு தலைமுறைக்குள் சரி செய்ய முயல்வோம் முனைப்பாக.

25 ஆண்டுகளுக்கு முன் "உங்கள் பிள்ளையை தமிழ் வழியில் கற்பிப்பீர்களா ஆங்கில வழியிலா?" என்ற விவாதம் இருந்தது. இப்போது "தமிழ் மொழியை உங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிப்பீர்களா? மொழிப்பாடம் அவசியமா என்ன?" என்று கேட்கும் அளவிற்கு மொழித் தேய்வு நிகழ்ந்துள்ளது. இதுதான் ஒரு தலைமுறையில் நாம் கண்டுள்ள மாற்றம்.

பெயரில் தமிழில்லை என்ற கருத்து இரண்டாம் பட்சமே. அது ஒரு அவா என்ற அளவில் எடுத்துக்கொண்டு முதன்மையான பிரச்சினைக்கு நகர்வோம். தமிழகப் பள்ளிகளில் தமிழ் என்பது ஒரு மொழிப்பாடமாகக் கூடக் கற்பிக்கப்படுவது மறுக்கப்படுகிறது (அல்லது தமிழ் மொழியைப் பயிலாமலேயே ஒரு மழலையின் கல்வித்தேர்ச்சி சாத்தியமாகிறது) என்பதே நாம் முதலில் சரி செய்ய வேண்டியது.

தமிழ் மொழியைக் கற்பதால் பிள்ளைகளின் வருங்காலத்துக்கு என்ன பயன் என்று கேட்பவர்கள் சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பிள்ளைகள் படிக்கும் கணிதம் அறிவியல் அவர்கள் அன்றாட வாழ்வில் பயன்படுவது போலவே தமிழ் மொழியும் நிச்சயம் பயன்படும் என்பதை சிறியதொரு அக ஆய்வில் நாம் அனைவருமே உணரலாம். வாழ்வின் எத்தகைய ஒரு சூழலுக்கும் ஒரு குறள் விடையாக அமைகிறது. ஒப்புக்கொள்கிறீர்களா? பாரதியின் பாடல்கள், பண்டைய தமிழ் நூல்கள் அனைத்திலும் எத்தனையோ அறிவார்ந்த சிந்தனைகள் அழகின் வெளிப்பாடுகள் பொற்குவியல்களாகக் குவிந்துள்ளன. ஒப்புக்கொள்கிறீர்களா? இச்செல்வங்களைத் துறப்பதென்பது சொந்த நாட்டிலேயே அகதியாவதற்கு ஒப்பாகும். பாடுபட்டு நம் முன்னோர் தேடிச் சேர்த்த மொழிச்செல்வங்கள் அனைத்தையும் புதைத்துவிட்டு ஏழைச் செல்வந்தராய் இறப்பது அறிவுடையோர் செயலா?

இச்செல்வங்களைத் தொடர்ந்து உரிமை பாராட்டுவதையும், துய்த்து மகிழ்வதையும் நமது வருங்கால சந்ததிகள் இழந்துவிடக் கூடாது என்ற ஒரு காரணம் போதாதா நம் பிள்ளைகளுக்கு நாம் தமிழ் பயிற்றுவிக்க?

Monday, August 19, 2019

வாட்சாப் அதிகாரம்


1.
அகர முதல எழுத்தெல்லாம் அன்று!இன்று
வாட்சாப் முதற்றே உலகு
2.
வேண்டுதல் வேண்டா எலாமுள்ள வாட்சாப்பை
யாண்டும் நோண்டார் இலர்
3.
எப்பொருள் வாட்சாப்வாய் கேட்பினும் அப்பொருள்
கப்சாவா வென்றாய்ந் துணர்
4.
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் வாட்சாப் கருமமே கட்டளைக் கல்
5.
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையவாட் சாப்
6.
உழைப்பதற்கு இல்லாத நேரம் சிறிதளவு
வாட்சாப்க்கும் ஈயப் படும்
7.
இனிய உளவாக இன்னாத கூறிவிட்டு
சாந்துணையும் சச்சரவு ஏன்?
8.
பீலிபெய் வாட்சாப்பும் போரடிக்கும் பார்வர்ட்கள்
சால மிகுத்துப் பெயின்
9.
மோப்பக் குழையும் அனிச்சம் தலைகுனிந்து
நோக்கக் குழையும் கழுத்து
10.
கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்குக்
கேடாகும் வாட்சாப் சுவை

Wednesday, July 24, 2019

மெல்ல நட மெல்ல நட - remix


It is raining in Chennai. Ride your bikes safely.


ராஜா மெல்லவிடு மெல்லவிடு பைக்கு என்னாகும்?
குண்டுகுழி சாலைகள் மோசம்
வரும் வண்டிகளைக் கவிழ்த்துவிடும்
நம்மை one not eight (108) ஏற்றிவிடும்

சாலையை காண்ட்ராக்டர் அமைத்தார்
அதில் லாபத்தை அவர்தான் எடுத்தார்
சாலையை காண்ட்ராக்டர் அமைத்தார்
அதில் லாபத்தை அவர்தான் எடுத்தார்
காணவில்லை அதன் பெயர் தார்
நம் EB நண்பர் அதைப் பெயர்த்தார்
நம் EB நண்பர் அதைப் பெயர்த்தார்....
ராஜா மெல்லவிடு மெல்லவிடு பைக்கு என்னாகும்?

வயதுள்ள மங்கையர் நடப்பார்
இங்கு வடைசுடும் பாட்டியும் கடப்பார்
வயதுள்ள மங்கையர் நடப்பார்
இங்கு வடைசுடும் பாட்டியும் கடப்பார்
சமிக்ஞையை அவர்தான் மதிப்பார்
அதை மீறிச்சென்றால் அவர் சபிப்பார்
அதை மீறிச்சென்றால் நம்மைச் சபிப்பார்....
ராஜா மெல்லவிடு மெல்லவிடு பைக்கு என்னாகும்?

சாலையில் எதற்கிந்த துடுக்கு?
இரு கால்கைகள் உடைந்த பின் துடிப்பு
சாலையில் எதற்கிந்த துடுக்கு?
இரு கால்கைகள் உடைந்த பின் துடிப்பு
உயிருக்கும் இங்கில்லை மதிப்பு
தினம் ஏறிடுதே இரத்தக் கொதிப்பு
தினம் ஏறிடுதே இரத்தக் கொதிப்பு
ராஜா மெல்லவிடு மெல்லவிடு பைக்கு என்னாகும்?
குண்டுகுழி சாலைகள் மோசம்
வரும் வண்டிகளைக் கவிழ்த்துவிடும்
நம்மை one not eight (108) ஏற்றிவிடும்

Tuesday, July 9, 2019

யாருக்காக இது யாருக்காக?

யாருக்காக இது யாருக்காக?
எங்கள் காவிரி அகண்ட காவிரி
நீரும் இன்றியே வறண்ட காவிரி
யாருக்காக இது யாருக்காக?
தாகமே போ... போ....
மேகமே வா.... வா....

மலைகள் மீது மழை பொழிந்தது
அது அருவியாகி அழகு தந்தது
சொர்க்கமாக நதியும் பாய்ந்தது
இன்று நரகமாகக் காய்ந்து விட்டது

மலர்கள் தானே நாம் வளர்த்தது
அந்த மலர்கள் இன்று ஏன் உதிர்ந்தது?
குயில்கள் தானே நாம் ரசித்தது
அந்தப் பறவை இன்று ஏன் மறைந்தது?

எழுதுங்கள் நதிநீர் சாசனத்தில்
நதிகள் பூமியின் உடைமை என்று
பாடுங்கள் உலகம் முழுதும் சென்று
உழவு மானிடக் கடமையென்று

உழவு செய்து நாம் பிழைத்தது
அந்த உழவு இன்று ஏன் கசந்தது?
பயிர்கள் காய்ந்து நாம் தவிப்பது
அது கண்ணில் நீரை வரவழைப்பது

தொன்றுதொட்டு இங்கு வந்தது
அதில் என்றிருந்து பங்கு வந்தது?
அங்கிருந்து ஆட்சி செய்பவர்
தினம் ஆடுகின்ற நாடகம் இது

Thursday, April 11, 2019

மதில்மேல் ஆவி - சிறுகதை


(உண்மைச் சம்பவத்தைத் தழுவியது)

ராதாகிருஷ்ணன் தீடீரென்று மாரடைப்பில் இறந்துபோவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பிள்ளைகள் இருவருக்கும் கல்யாணம் செய்துவிட்டு, பேரன் பேத்திகள் எடுத்து அறுபத்தைந்து வயதில்தான் இறந்துபோனார் என்றாலும், எந்த அறிகுறியும் இல்லாத அவரின் திடீர் மரணம்தான் உறவினர்களுக்குப் பெரும் வருத்தமாக இருந்தது. தவிர 65 வயது என்பது இந்தக் காலத்தில் சின்ன வயதுதானே.

ராதாகிருஷ்ணனின் தம்பி சுந்தரம்தான் இறுதிக்காரியங்களை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார். பத்து வயது வித்தியாசம் இருந்தாலும் சுந்தரமும் ராதாவும் மிகவும் நெருக்கமாக வளர்ந்தவர்கள். இதைச் செய்; அதைச் செய்; என்று அண்ணனின் இரண்டு மகன்களான ரமேசையும், சங்கரையும் விரட்டிக்கொண்டிருந்தார் சுந்தரம்.

எல்லா உறவினர்களும் வந்துவிட்டார்கள் என்பது உறுதியானதும் சவத்தை எடுக்க ஆயத்தமானார்கள். "டேய் ரமேசு தேர் ஜோடனை இன்னுமா நடக்குது..? மணியாவுது பாரு" என்று ராதாகிருஷ்ணனின் பெரிய மகனைக் கேட்டவர், "இரு நானே பார்க்கிறேன்" என்று போனார்.

அங்கே அலங்காரம் செய்பவர்களைக் கடிந்துகொண்டார்... "ஏம்பா ஏதோ ஒப்புக்கு ஜோடனை பண்றீங்க.. சரங்களைச் சேரக் குத்துங்க.. இன்னா பூக்காரரே... ராதா அண்ணன் கிட்ட வாங்குன கடனைத்தான் தள்ளித் தள்ளிக் குடுப்பீங்க...இப்ப உங்க ஆளுங்க சரத்தை தள்ளித் தள்ளிக் குத்துறானுங்க.. எதுவும் கேக்கமாட்டீங்களா..?"
"டேய் பசங்களா கேக்குதா..?" என்ற பூக்காரர், சுந்தரம் நகர்ந்ததும் "ஆமாம்.. இவர் குடுக்குற காசுக்கு இதுக்கு மேல அடர்த்தியா யார் பூ ஜோடிப்பாங்க..?" என்று முணுமுணுத்தார்.

சவத்தைக் குளிப்பாட்டி சாங்கியம் செய்துகொண்டிருந்தவரையும் இது சரியில்லை, அது சரியில்லை என்று கடிந்து கொண்டார் சுந்தரம்.

அடுத்து, நெய்ப்பந்தம் பிடிக்க வந்த பேரன் பேத்திகளில் சங்கரின் மகன் இல்லாததைக் கண்டதும் வெகுண்டார் சுந்தரம். "டேய் சங்கரு எங்கடா என் சின்னப்பேரன்..? ஆத்தாக்காரி முத்தானையிலேயே முடிஞ்சி வச்சிருக்காளா...? அவளுக்குத் தெரியலானாலும் உனக்குத் தெரிய வேணாம்?... பேரப்பசங்க நெய்ப்பந்தம் காட்டுலன்னா எங்க அண்ணனுக்கு சொர்க்கத்துக்கு எப்படிடா வழி தெரியும்?"

சங்கர் ஓடிப்போய் மகனைத்தூக்கிக்கொண்டு வந்தான். குழத்தைக்கு டயப்பர் அணிவித்திருப்பதைக் கண்டு அதற்கும் வெகுண்டார் சுந்தரம் "வெள்ளைக்காரனைப் பார்த்து நம்ம ஆளுங்களும் இதைக் கட்டிவிட்டுடறாங்க .. ஆம்பளப் புள்ளைக்கு இந்த வயசுலியே வெம்பிப்போச்சுன்னா அப்புறம் கொழந்த பொறக்கலன்னு ஆஸ்பிடலுக்கு அலையவேண்டியதுதான்.. "

சங்கரின் மனைவி கோபமாகக் கணவனைத் திருகினாள் "உங்க சித்தப்பா ரொம்ப பேசுறாரு.. நல்லதுக்கில்ல..." சங்கர் "அவரைப் பத்தி புதுசாவா தெரிஞ்சுக்கிற..? ஒருத்தர் கிட்டவாவது அவருக்கு நல்ல பேரு இருக்கா பாரு.." என்று மனைவியைச் சமாதானப்படுத்தினான்.

சுந்தரம், ராதாகிருஷ்ணன் இருவருக்கும் மூத்தவரான அவர்களின் அக்கா தம்பியிடம் பரிவாக "இப்ப என்னாத்துக்கு இப்படிக் கூச்சல் போடுற..? பக்குவமா சொல்லலாமில்ல? கத்திக் கத்தி தொண்டை காஞ்சிப்போச்சி.. ஒரு வாய் தண்ணிகூட குடிக்காம இருக்குற.. இந்தா காபி குடி... கிட்டயா இருக்கு சுடுகாடு? நடந்து போய் வரணுமில்ல..?"

"எனுக்கு எதுவும் வேணாம்க்கா.. அண்ணனை அடக்கம் பண்ணிட்டுத்தான் எதுவும் சாப்பிடுவேன்.. " என்று அடுத்த காரியங்களில் இறங்கினார்.

ஒருவழியாய் சவ ஊர்வலம் புறப்பட்டு இடுகாட்டை அடைந்தது. ராதாகிருஷ்ணனுக்கு மூத்தவராக அக்கா இருந்ததால் அவர்கள் வழக்கப்படி அவரைப் புதைக்கவேண்டும். குடும்பத்தில் மூத்த மகனோ மகளோ மட்டுமே எரியூட்டப்படவேண்டும்.

சவக்குழி தோண்டப்பட்டிருந்தது. அதைத் தோண்டுபவரிடம் காலையிலேயே சுந்தரம் அடையாளம் சொல்லி அனுப்பியிருந்தார். "புங்க மரத்துக்கு மேற்கே அண்ணியைப் புதைச்ச இடம் தெரியுமில்ல. அதும் பக்கத்திலேயே குழியை வெட்டு..." ராதாகிருஷ்ணனின் மனைவி இளவயதிலேயே இறந்துவிட்டார். அவர் நோய்வாய்ப்பட்டிருந்தபோது சுந்தரத்திடம் "இனி நான் பொழைப்பேன்னு தோணல.. என்னை அடக்கம் பண்ணுற இடத்துக்குப் பக்கத்திலேயே.. உங்க அண்ணனைக் கொண்டு வந்து சேத்திருப்பா...." என்று சொன்னதை எண்ணிக் கண்ணீர் உகுத்தார்.

ஆனால் இப்போது வெட்டப்பட்ட குழி புங்கை மரத்தைவிட்டுத் தள்ளியிருந்தது. மரத்தைச்சுற்றி ஒரு மதில் சுவர் எழுப்பப்பட்டிருந்தது.. அண்ணியைப் புதைத்த இடம் மதிலுக்குள் இருந்தது. "அடப்பாவிங்களா ஆறு கொளத்த ஆக்கிரமிச்சீங்க.. மனுஷனுக்கு ஆறடி நிலம் சொந்தம்.. அதையும் அபகரிச்சிட்டீங்களேடா" என்று அரற்றினார். "இந்த மதிலை ஒடச்சி புதுசா ஒரு குழி வெட்டித்தான் அண்ணனை அடக்கம் பண்ணுவேன்..." என்று வீரம் காட்டினார். ஊர்ப்பெரியவர்கள் கூடி "ஏம்பா சுந்தரம், நடக்காத கதையைப் பேசாதே…ஆகுற வேலையைப் பாரு. இப்பவே பொழுது சாய்ஞ்சிருச்சு" என்று வெட்டப்பட்டிருந்த குழியிலேயே ராதாகிருஷ்ணனைப் புதைக்க ஏற்பாடு செய்தார்கள். மற்ற சாங்கியங்களைப் பார்த்துப் பார்த்து செய்த சுந்தரம் இப்போது எதிலும் ஈடுபடாது புலம்பிக்கொண்டே இருந்தார். அண்ணனின் முகத்தில் மண்ணை அள்ளிப் போட்டதும் கதறி அழுது மயங்கினார். தண்ணீர் தெளித்து எழுப்பினார்கள்.

மண்ணைக்கொட்டத் தொடங்கிய உடனே பெரும்பாலோனோர் வீடு திரும்பிவிட்டார்கள். இடுகாட்டில் வேலை செய்பவர்கள் ரமேசிடமும் சங்கரிடமும் " சித்தப்பாவுக்கு ஒடம்பு முடியல பாரு... அவரை அழைச்சிக்கிட்டுப் போங்கப்பா.. நாங்க குழியை மூடிடுறோம். காலையில் பால் வைக்க வாங்க" என்றனர். சற்று தெளிந்திருந்த சுந்தரம் "ரமேசு குழியை முழுசா மூடுற வரைக்கும் இருந்துட்டுப் போகணும்.. இவங்க சரியா மூடலன்னா அண்ணனை நாய் நரி வந்து கொதறிவிடும்.. ஏற்கனவே குழி ஆழம் கம்மியா இருந்தது.. ஊராளுங்க என் வாய அடைச்சிட்டாங்க..” என்றவர், “இதோ ஒண்ணுக்குப் போய்விட்டு வரேன்" என்று மதில் பக்கம் போனார்.

சற்று நேரத்தில் தடாலென்று சத்தம் கேட்டது. இப்படி ஒரு அசம்பாவிதத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. மதிலருகில் சுந்தரம் சரிந்து கிடந்தார். தலையிலிருந்து ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. அண்ணனும் தம்பியும் தலையில் அடித்துக்கொண்டு அழுதார்கள். "அப்பாவைத் தொலைச்சிட்டு இப்ப சித்தப்பாவையும் தொலைச்சுட்டோமே..." தேர் ஜோடித்து பிணத்தை ஏற்றிவந்த வண்டிக்காரருக்கு ரமேஷ் போன் செய்தான். "சீக்கிரமா வண்டியைத் திருப்பிக்கிட்டு வாங்க...."
"எதுக்குப்பா...?"
“வாங்க சொல்றேன்” என்று இணைப்பைத் துண்டித்தான்.

சிறுநீர் கழிக்கச் சென்ற சுந்தரம் மதிலருகில் சென்றதும் ஓவென்று அழுதார். "அண்ணி உங்களுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாத்த முடியலையே... பக்கத்துலதான் அடக்கம் செய்யமுடியல... உங்க ரெண்டு பேர் நடுவில் இருக்கும் சுவரை உடைக்காம விடமாட்டேன்" என்று படார் படார் என்று தலையால் முட்டினார். அப்படியே கீழே விழுந்தவர் தான். ரமேசும் சங்கரும் ஓடிவருவதற்குள் உயிர் பிரிந்துவிட்டது. தலையில் பட்ட அடியினாலா, சாப்பிடாமல் இருந்ததாலா என்று தெரியவில்லை. ரமேஷ் பார்த்த போது மூச்சும் இல்லை நாடியும் இல்லை. அண்ணனுக்கும் அண்ணிக்கும் தடையாய் இருந்த மதில்மேல் அவர் ஆவி நின்று விட்டது. ஆவி உடைத்து உடையுமா மனிதன் கட்டிய மதில்?

Friday, March 22, 2019

குருவிகள் தினம் - மார்ச் 20


#ramblingthoughts

கம்பங்கதிரிலிருந்த முத்து ஒன்று "குருவி எங்கே? குருவி எங்கே?" என்று கத்திக்கொண்டே இருந்தது. குருவிதான் தன்னை உண்ண வேண்டும் என்று குறியாயிருந்தது அந்த முத்து. ஆனால் அதை நெகிழிப்பையில் போட்டு விற்பனைக்கு வைத்துவிட்டார்கள். அப்போதும் கத்திக்கொண்டே இருந்தது. அதன் ஓலம் தாங்காத மற்ற முத்துகள் அதை ஒரு ஓட்டை வழியே வெளியே தள்ளிவிட்டன.

'கம்பும் தன் வாயால் கெடும்' என்பதுபோல் கீழே விழுந்த முத்தின் "குருவி எங்கே?" ஓலம் கேட்டு எறும்புகள் வந்து அதைத் தூக்கிச் சென்றன. அதிர்ஷ்டவசமாய் வழியில் எறும்புகள் பாரம் இறக்கிவைத்த ஒரு நொடியில் உருண்டு தப்பித்தது அந்தக் கம்பு முத்து. குருவிக்குத்தான் உணவாவேன் என்று "குருவி எங்கே? குருவி எங்கே?" என்று கத்திக்கொண்டே இருந்தது. ஓலமிட்டு ஓலமிட்டு மயங்கிவிட்டது அந்த முத்து.

ஒருநாளா இரண்டு நாட்களா என்று தெரியவில்லை. மயக்கத்திலிருந்து கண் விழித்த கம்பு முத்து திகைத்தது. அதற்கு வேர்விட்டு சிறிய முளை கிளம்பியிருந்தது. அசையமுடியாமல் அழுதழுது மரித்துப்போனது அந்த முத்து. அதன் மறைவில் பிறந்தது புதிய செடி.

பிறிதொருநாள் இந்தச் செடி பெரிதான பிறகு அதில் பறித்த கம்பை மாவாக்கி உணவகம் ஒன்றில் பாஜ்ரா ரொட்டி சுட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த ரொட்டிக்காகக் காத்திருந்த ஒரு சிறுமி, அவள் மேசையில் வைத்திருந்த தாளில் புள்ளிகளை இணைத்துப் படம் வரைந்து கொண்டிருந்தாள். ரொட்டி வந்ததும் படத்தைத் தள்ளிவைத்துவிட்டு ரொட்டியை ரசித்துச் சாப்பிட்டாள் சிறுமி. அப்போது ரொட்டியின் சிறு விள்ளல் ஒன்று தாளில் வரைந்த குருவியின் அலகின்மேல் விழுந்தது.

Wednesday, March 13, 2019

போவோமா ஊர்கோலம் in English


Lyrics: Gangai Amaran
Translation: Bala Sivasankaran

(Pallavi)
F: 
Shall we go in a procession? 
Shall we see the world's cross section? 
Flowing ponni river 
singing hundred numbers... 
Lovely scene is a pleasure 
Life like this is a treasure 
Shall we go in a procession? 
Shall we see the world's cross section? 

(Charanam 1)
M: 
Can you ever imagine a princess walking barefoot here?
This isn't fair.. this is isn't fair 

F: 
Can I ever experience the pleasure of the snow and sun? 
I couldn't there.. I couldn't there 

M: 
Can you ever give up your comfortable palace and then 
live in a hut.. live in a hut ?

F: 
Can I ever soak up in the fresh air in a mighty palace?
I wouldn't get... I wouldn't get 

M: 
How can you let go your red carpet? See here a lot of potholes 

F: 
I for sure enjoy the grass carpet laid on the lovely field bunds 

M: 
You must be a crazy girl !

F: 
No no I  am a desi  girl !

(Pallavi)
F: 
Shall we go in a procession? 
Shall we see the world's cross section? 
Flowing ponni river 
singing hundred numbers... 
Lovely scene is a pleasure 
Life like this is a treasure 
Shall we go in a procession? 
Shall we see the world's cross section? 

(Charanam 2)
F:
Water falling from the mountain naughty little sparrow singing
What a wonder.. What a wonder

M:
Wild is ur imagination unnecessary admiration
You should ponder what to wonder

F:
Sparkles in the river so bright, what a wonder beautiful sight
There you see pearls There you see gems

M:
What is going on in your mind, I am getting dizzy in my head
I can never understand you

F:
River girl Cauvery recites and decides to dance to the rhythm

M:
Sluice gates hundreds can never be able to hold in her mayhem

F:
Don't go on hey you must stop

M:
I'm gonna go hey you too stop

(Pallavi)
F: 
Shall we go in a procession? 
Shall we see the world's cross section? 
M:
Flowing ponni river 
singing hundred numbers... 
F:
Lovely scene is a pleasure 
Life like this is a treasure 
M: 
Shall we go in a procession? 
F:
Shall we see the world's cross section?