Saturday, November 30, 2019

சிறுமழைதான் பொழிகிறதே

மழைநீர் தேங்கிய தெருவில் இறங்கி நடக்கையில் தோன்றியது...
"முன் பனியா முதல் மழையா" நந்தா படப் பாடல் மெட்டு.

***************

சிறு மழைதான் பொழிகிறதே
என் தெருவில் நீர்தான் நிறைகிறதே
வழிகிறதே ஷூ நனைகிறதே...
வடியாத தெருவில் நின்றேன்
புரியாமல் இறங்கிச் சென்றேன்
மாற்றம் தருவது யார் தானோ?

ஒரு காலத்தில்.. ஒரு காலத்தில்
மழை பெய்தாலும் அதுவும் வடியுமடி
இந்தக் காலத்தில் இந்தக் காலத்தில்
மழை போகின்ற பாதை மறைந்ததடி
நடுவினில் குழிகளில் கால் படுமோ?
வழிவரும் வாகனம் சாய்ந்திடுமோ?
வாழ்கிறோம் நாம் நம் சென்னையில்...

என்றும் இயற்கையின் வழி நடக்கையில்
அது எப்போதும் நமக்கு நலம் தருமே
இன்று செயற்கையின் வழி நடக்கிறோம்
அது எப்போதும் நமக்கு இடர் தருமே
மழையையும் வெயிலையும் தாங்கிடுமோ?
மழலையும் முதுமையும் தான் நகுமோ?
மாறுமோ நாளை நம் சென்னையே...?


4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அர்த்தமுள்ள மாற்றம்...

Yarlpavanan said...

அருமையான வரிகள்

மோ.சி. பாலன் said...

நன்றி தனபாலன்

மோ.சி. பாலன் said...

மிக்க நன்றி நண்பரே