Friday, February 1, 2013

களை

அழகுக்கு வளர்த்த புல்வெளியில்

களையென்று பிடுங்கினாள்
.
.
.
நெற்பயிர்



Bench at the Beach


1. Sea:


இரைதேடிச் சிறகசைக்கும்
கடற்பறவைகள் இல்லை.

இறகின்றிச் சிறகடிக்கும்
சிறு மழலைகள் இல்லை.

உடல் ஒட்டிய மணல் உதிர்க்கும்
உயிர்க் காதலர் யாரும் இல்லை

நிழற்படமாய் நின்றுவிட்டது
அலை நிறுத்திய கடல்.


2. Bench:

இரைதேடிச் சிறகசைக்கும்
கடற்பறவைகள் இல்லை.

இறகின்றிச் சிறகடிக்கும்
சிறு மழலைகள் இல்லை.

உடல் ஒட்டிய மணல் உதிர்க்கும்
உயிர்க் காதலர் யாரும் இல்லை

தனிமரமாய் நின்றுவிட்டேன்.
கடலாட முடியாது
முடமான என் கால்கள்.

நின்று-
ஒரு துளியால் எனை நனைக்குமா
ஓடும் மேகம்?

பந்துமுனைப் பேனா

மையிட்ட கண்ணின் சுழற்சியாய்


கவிதை எழுதியது - என்


பந்துமுனைப் பேனா