Thursday, October 14, 2021

கட்டுக்குள் அடங்காதவை

 செரிமானமாகாத அவமானங்களை 

அசைபோட்டுக் கொண்டிருக்கும்போதே

புதிதாய் ஒன்று நிகந்துவிட

தூரவரிசையில் மேலும் பல நிற்பதுபோல்

துணுக்குற்று ஒடுங்குகின்றது மனம்


பொறுமை எனும் ஆமை ஓடு

கவசமா இல்லை அவமானமா?

என்ற கேள்விக்கு

சுமை என்று வருகின்றது விடை


ஊர்-வதை அஞ்சி ஊர்வதை

வீழ்ச்சியென்றால் வருத்தம் வரக்கூடும்.

பதுங்குதலென்று கொள்வோம்...


மடித்து எழுதிய கட்டுக்குள் அடங்காத

காயங்களைக் காட்டவும் முடியாமல்

மறைக்கவும் முடியாமல்

தவிக்கின்றன வரிகள்

-பாலா சிவசங்கரன்

14 10 2020

No comments: