Sunday, October 3, 2021

REMIX இது. ORIGINAL எது? #12

 பாலாற்றின் கரையிலே

வெகு நாளாக மரமொன்று

அதன் வேரும் புண்ணானது

சுடும் மண்ணில் திண்டாடுது


அங்கே ஒரு பாலம்

ஆற்றைத் தாண்டிப் போகும்

இங்கே இது பாவம்

நீருக்கெங்கே போகும்?

பூமிக்குள்ள இல்லாதத

வானத்திடம் மன்றாடுதோ?

காற்றுக்குள்ள இல்லாதத

கடலில் எடுக்க வாதாடுதோ?

வானம்‌ காயுது

அதுதானே பொழியுது?

மரமும் காயுது

அதுதானே காய்க்குது?

மரம் இன்றி நிழல் ஏது?

மணல் இன்றி நதி ஏது?

No comments: