Saturday, September 25, 2021

புரட்டாசி புலம்பல்

(சிவகாமி நெனைப்பினிலே மெட்டு)

மனைவி: பிரியாணி நெனைப்பினிலே சாதம் தின்ன மறந்ததென்ன?

கணவன்: புரட்டாசி மாசத்திலே நான்வெஜ் செய்ய மறுப்பதென்ன?Drum-க்குள்ளே தட்டுவியே... மண்வெட்டிபோல் வெட்டுவியே...

மனைவி: கொஞ்சம் பொறுத்துக்கோ புலம்பலை நிறுத்திக்கோ.. மாசம் முடிஞ்சதும் மாமிசம் எடுத்துக்கோ..

சரணம்-

கணவன்: மாலை முடிஞ்சாலே பாலைத் தயிராகத் தோய்க்கிற... உறை ஊத்துற... காலை விடிஞ்சாலே காயைக் கறியாக ஆக்குற கடுப்பேத்துற...

மனைவி: சான்ட்விச் கொடுத்தாலே ஆம்லெட் தரச்சொல்லிக் கேக்குற... என்ன பாக்குற...? காயை நறுக்காமல் டீயை வடிக்காமல் ஏய்க்குற... டபாய்க்குற....

கணவன்: போதும் இது போதும் எந்தன் வேதனை உனக்கிங்கு புரியாதா? மாதம் ஒரு மாதம் அதன் பெயரினை மாற்றிட முடியாதா?

மனைவி: தம்ம் கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ... தம்ம் ஆனதும் வெட்டிக்கோ வெட்டிக்கோ !!