Wednesday, October 20, 2021

விஷமுங்கோ

 மலைமலையாய் மாம்பழங்கோ

மருந்து வச்ச மாம்பழங்கோ


பளபளக்கும் பப்பாளிங்கோ

கல்லு வச்ச பப்பாளிங்கோ


குவிச்சு வெச்ச கொய்யாங்கோ

கெமிக்கல் வெச்ச கொய்யாவுங்கோ


குலை குலையா 

திராட்சைங்கோ

மருந்து தெளிச்ச

திராட்சைங்கோ


மழமழன்னு ஆப்பிளுங்கோ

மெழுகு போட்ட

ஆப்பிளுங்கோ


ஏழைக்கேத்த பழமுங்கோ

எங்க வாழைப்பழமுங்கோ

பாழும் வயிற்றைக்

கெடுக்கவே ஸ்ப்ரே

அடிச்ச பழமுங்கோ


நல்ல உணவு நாமும் தின்னு

நாப்பது வருசம் ஆச்சுங்கோ


சோத்துலயும் விஷமுங்கோ

கொழம்புலயும்

விஷமுங்கோ

கறியும்மீனும்

விஷமுங்கோ

காய்கறியும்

விஷமுங்கோ

கடைசியிலே

பாக்கப் போனா

கனிஞ்ச பழமும்

விஷமுங்கோ


விஷத்தைத் தின்னு

வாழும் மனுசன்

நல்லவனாவது

எப்படிங்கோ?

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

இன்றைய பாழும் நிலையைச் சொல்லும் கவிதை. வேதனையான உண்மை.

மோ சி பாலன் said...

நன்றி வெங்கட் ��