Wednesday, September 2, 2009

எழுதுகோல்

வல்லவனது வளையாத கோல்
வள்ளுவனதோ அழியாத கோல்

வேண்டுகோல், தாண்டுகோல்
தூண்டுகோல், ஊன்றுகோல்
என்று பலவகையாய் எழுதுகோல்கள்

மைவகைகள்:
பொறுமை பற்றாமை பொறாமை
வறுமை தீராமை கொடுமை
வேண்டுமை கைம்மை கலங்காமை

தருமை பெருமை
பெறுமை சிறுமை
ஒருமை தீமை
நன்மை பன்மை
புரியாமை பெண்மை
மற்றும்...
உண்மை ஊமை.

உன் மை விட்டு விட்டு எழுதினாலும்
உண்மை விட்டு விடாமல் எழுதட்டும்

நீ வைக்கோல் தராசுக்கோல் ஆதல் நலம்.

No comments: