Thursday, September 17, 2009

இறை தேடல்

புவிச் சட்டியில் சிறிது சூரியக் குழம்பூற்றிக்

காற்றுக் குழாயில் எப்பொழுதாவது வரும்

மழைக் குடிநீர் பிடித்து,

வயற் பாத்தி(ரங்)களில்

நெற்சோறு சமைத்து,

போற்றுவோர் பலரைப் புறக்கணித்து

மாற்றவர்க்கும் மாபெரும் விருந்து படைக்கும்

அகிலச் சமையற்காரர் யார்?

அப்படியொருவர் இருந்தால்

அவரைச் சமைத்தவர் யார்?

?

இரை தேடலுடன்
இறைதேடல் தொடர்கிறது..

No comments: