Thursday, September 17, 2009

கவிஞன்

இருவாழையும், தேக்கும்,

சிறுகொடியும், கனிகளும்,

அரசிலையும், மாவிலைகளும்,

நறுந்தேனும், கோவையும்,

விரிமயிலும், மீன்களும்,

கரும்பாம்பும், வண்டுகளும்,

ஒருசங்கும், முல்லைமலர்களும்,

பிறவும்

ஒருங்கிணைந்ததே பெண்ணெனக் கூறி

அருஞ்சுவர்க்கபுரியை

அடர்க்காடாக்கிய

பித்தன்.


No comments: