Wednesday, September 2, 2009

அழுக்கு

உள்ளேயே உற்பத்தி ஆவது

வெளியிலும் தெரிந்து விடுகிறது.

வெளியிலிருந்து வந்தது

உள்ளேயும் ஒளிந்துகொள்கிறது.



உள்ளிருப்பதை உணராதவர்கள்

"ஆஹா என்ன சுத்தம்?" என்று வியக்கிறார்கள்

இவர்கள் எண்ணத்தைக் காப்பாற்றுவதற்காகவே

என்னைச் சுத்திகரித்துக் கொள்கிறேன்

இவர்களுக்கு நன்றி.



வெளியிருப்பதையோ பலரும்

பூதக்கண்ணாடி கொண்டே பார்க்கின்றனர்

எனக்கே புலப்படாதவற்றை புலப்பட வைப்பதால்

இவர்களுக்கும் நன்றி



உள்ள அழுக்கு நீங்கும் வரை

சுத்திகரித்துக் கொண்டே இருப்பேன்

சுத்தமாக..

உலகைவிட்டு நீங்கும்வரை.




No comments: