Saturday, March 24, 2012

பதவி

பதவி வரும்போது-
பணிவு வரவேண்டும்; துணிவு வரவேண்டும்.
நிறுத்தடா....
பதவி வரும்போது உதவி வரவேண்டும்.

வந்த வேலையை விட்டு சொந்த வேலையா?
பணத்தைப் பொட்டில்* வைத்துப்
பல்லக்கில் ஏறாதே...
பிணமே.

வணக்கமா? உனக்கா?
அடப்போடா...
எருதில் ஏறியவனெல்லாம் சிவனில்லை
எருமை ஏறியவன் எமனுமில்லை.
________________________________________________

* - பொட்டில்/நினைவில்/குறிக்கோள்

4 comments:

அப்பாதுரை said...

பணிவும் துணிவும் வந்தால் குறைந்தா போயிடும்? :)

ஹேமா said...

மூன்றும் வேறு வெறு மூன்றாய்த் தெரிகிறதே !

கௌதமன் said...

ஒரே மரியாதைக் குறைவாய் இருக்கின்றனவே! வரிகள்!!

மோ.சி. பாலன் said...

அப்பாதுரை - இவை மட்டும் போதாதென்கிறேன்.
ஹேமா - Feviquick தீர்ந்துவிட்டது : )
கௌதமன் - மனதில் பட்டவாறு எழுதியுள்ளேன்...நெஞ்சு பொறுக்காததால்