Thursday, March 15, 2012

REMIX: முன்பே வா என் அன்பே வா

situation: திருமணத்துக்கு முன்பாகவே விசா எடுக்கவேண்டிய காரணத்தால் - பதிவுத்திருமணம் செய்துகொள்ளவிருக்கும் ஆண் பெண் பாடுவது. விரிவான பின்னணியை என் முந்தைய பதிவான "மண(&மன) உறுதி"-யில் படித்து அறிந்துகொள்ளவும்.

REMIX செய்யப்படுவது  'சில்லுனு ஒரு காதல்' படத்தில் வரும் பாடல்.
_______________________________________________________________

ஆண் : முன்பே வா என் அன்பே வா
               முன்னுரையும் முறைதான் வா
              
பெண்: முன்பே வா என் அன்பே வா
               உன்பேர் தான் என் பேர் தா...
               நான் இனி நானா-இல்லை
               உன்னில்  பாதி நானா?
              
ஆண்:   நாம் வாழும் தேசம்- இனி
               காதல் தேசம் தானா?                 ( முன்பே வா)

பெண்: பூந்தேரினில் நீ எனை வைத்தாய்
              புது ஊர்வலம் நான் வர வைத்தாய்
              நான் ஏற்றிடும் தீபத்தைத் தூரத்தில் நீ வைத்தால் தகுமோ?

ஆண்: சேரும் -  நலம் பல நூறும் -
              புலம் பெயர்ந்தே நாம்
              பறந்திட .. வா..                      ( முன்பே வா)



                 




2 comments:

கௌதமன் said...

நல்ல கற்பனை. கௌதம் மேனனுக்கு பரிந்துரைக்கின்றேன்!

ஸ்ரீராம். said...

எனக்கு கவுதம் மேனனையும் தெரியும், இளையராஜாவையும் தெரியும். பிரச்னை என்னவென்றால்....... அதேதான் அதேதான்..... அவர்களுக்கு என்னைத் தெரியாது!