Monday, March 19, 2012

நாலணா

பேரனுடன் அமர்ந்து
வீடியோ கேமில் எதிரிகளைச்
சரமாரியாக சுட்டுத் தள்ளிக்கொண்டிருந்தார்-


உடல் தேர்வுக்குமுன்
வாழைப்பழம் சாப்பிடவைத்திருந்த
நாலணாவைச் சேமித்ததால்
எடை குறைவென்று ராணுவத்தில்
தேர்வுபெறாத தாத்தா

5 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
ஒருவேளை அந்த ஆதங்கத்தை இப்போது இப்படி
தீர்த்துக் கொள்கிறாரோ ?
மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்

கௌதமன் said...

நாலணாக்கள் செல்லாது என்று அறிவிப்பதற்கு முன்பே இதை வெளியிட்டிருக்கக் கூடாதோ! :))

ஹேமா said...

தாத்தா இப்பவும் வீரன்தான் !

Thenammai Lakshmanan said...

haahaa arumai..:)

மோ.சி. பாலன் said...

ரமணி - வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

கௌதமன் - இன்று செல்லக் காசு. அன்றோ ஒருவரின் வாழ்க்கையை மாற்றிவிட்டது.

ஹேமா - மிகவும் உண்மை. நன்றி.

தேனம்மை - வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.