Saturday, March 17, 2012

சிறைச்சாலை

சமீபத்தில் தொலைக்காட்சியில் அந்தமான் சிறைச்சாலை பற்றிய நிகழ்ச்சி ஒன்று பார்த்தேன். (நிழல்கள் ரவி நடத்தும் நம்பினால் நம்புங்கள் நிகழ்ச்சி)இந்திய விடுதலைக்காக எத்தனை பேர் எவ்வளவு கொடுமைகளை அனுபவித்துள்ளனர் என்பதை அறியும் போது மிகவும் வேதனையாக இருந்தது. 
அதைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள விக்கிபீடியாவைப் புரட்டிக்கொண்டிருந்தபோது என் மனைவி சமையலறையிலிருந்து  "அப்பா என்ன செய்கிறார் பார்" என்று மகனிடம் கேட்டார்.


ஹாலிலிருந்து ஓடிவந்த மகன் computer screen-ல் மேற்கண்ட படத்தைப் பார்த்துவிட்டு, "அம்மா - நம்ம புதுசா அபார்ட்மென்ட் தேடிக்கிட்டிருக்கோமே - அதான் அப்பா ஏதோ லே அவுட் பார்த்துக்கிட்டிருக்கார்" என்றான்.

5 comments:

கௌதமன் said...

ஹா ஹா சூப்பர் Shot (படமும், பையனின் கமெண்டும்!)

ஸ்ரீராம். said...

பார்வையின் மறுபக்கம்....!

ஹேமா said...

சொந்தப் பிரச்சனைகள் நிறைய இருக்குங்கோ !

அப்பாதுரை said...

அப்பா..ர்ட்மென்ட்

மோ.சி. பாலன் said...

கௌதமன், ஸ்ரீராம், ஹேமா, அப்பாதுரை - வருகைக்கு நன்றி.