Monday, April 30, 2012

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்



எட்டாத உயரத்தில்
   எட்டான கால் கொண்டு
       பட்டான நூல் கொண்டு
           கட்டிய வலை வீட்டில் விழும்
              விட்டில் உண்டு மகிழும்
                 எட்டுக்கால் பூச்சி நான்
கட்டாந் தரையிலும் 
   நெட்டான சுவரிலும்
       கட்டாக நடந்து 
           கிட்டாமல் கிட்டியதை  
               கட்டாகக் கட்டி 
                  பொட்டாகச் சுமந்து
                      பெட்டியில் வைத்துண்ணும்
                         குட்டிக்கால் எறும்பு நான்
தட்டான கணினியை
   பட் பட் பட்டென்று
      தட்டித் தட்டித் தட்டி
         நெட்டெல்லாம் தேடி  
            நைட்டெல்லாம் கண் விழித்து
                கட்டுக் கட்டாய்  
                   நோட்டு எண்ணி
                       தட்டுத் தட்டாய்த் தின்று
செரிமானம் இல்லையென்றோ
    சரி மனம் இல்லையென்றோ
        மருத்துவரை நாடாமல்
           உண்ண உழைக்காமல் எம்போல்
              உழைத்து உண்க வென்று
                 உழைப்பாளர் தினத்தன்று 
                    வாழ்த்துரை கூறுகின்றோம்.
                         வாழ்க வளமுடன்.
                              


   
     

5 comments:

ஸ்ரீராம். said...

கவிதைக் கட்டிடத்தை ரசிக்க முடிந்தது.

கௌதமன் said...

ஆஹா அருமை.

ஹேமா said...

கவிதையை ரசனையோடு அழகுபடுத்தியதைத்தான் கூடுதலாக ரசிக்க முடிந்தது.நானும் முயற்சி செய்து பார்க்கப்போறேன் !

சிவகுமாரன் said...

அருமை.
வாழ்த்துக்கள்

Anonymous said...

மிக நல்ல சிந்தனை வரிகள்.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.