Friday, November 20, 2009

சாமி எறும்பு

அய்யப்ப சாமிக்கு ஆசாரமாய்ப் படைத்து
அம்மா சாமி தந்த
ஆவின் பாலில்
மிதந்தது -
"சர்க்கரை நோயால்" செத்த எறும்பு.
எதுத்துப் போட்டுவிட்டுக் குடித்து விட்டேன்.
சைவமா? அசைவமா?
சாமியே சரணம் ஐயப்பா.

3 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

ஆஹா புதுசா வர்றவங்க எல்லாரும் பட்டைய கிளப்புறாங்களே..

அவ்வ்வ்வ்...

கௌதமன் said...

வசந்த் திரு பாலசுப்ரமணியன் எனக்கு தமிழ் கற்றுக்கொடுக்க தலையால தண்ணி குடிச்சுப் பாத்தாரு - கடைசியில், திருவிளையாடல் படத்தில் வருகின்ற பாணபத்திரர் போல - தேமா புளிமா எல்லாம் என்ன என்றே தெரியாத என்னை போய் எங்கேயாவது குருமா சாப்பிடு என்று அனுப்பி வைத்துவிட்டார்.

அப்பாதுரை said...

ஐயப்ப பாலில் விழுந்த எறும்புக்கு மோட்சம்