Friday, November 13, 2009

பாலம்

நதியின் கரையில்
நடந்து கொண்டிருந்தோம் நீயும் நானும்
குறுக்குப் பாலம் தூரத்தில் தெரிந்தது - சிறியதாய்
    
எங்கேயோ வேகவேகமாய்ச் செல்வதாய்ப் 
பாசாங்கு   செய்த நதி
நாமிருவர் பேசுவதை ஒட்டுக் கேட்டுக் கொண்டே வந்தது


நடந்து கொண்டிருந்தோம் நீயும் நானும் -
குளிர்க்காற்றை நம் சுவாசங்களால் சூடாக்கி.
 நடந்து கொண்டிருந்தோம் நீயும் நானும்.

எடைகளுடன் நம் எண்ணங்களையும் சுமக்கவோ என்னவோ 
குறுக்குப் பாலம் பெரிதாகிக் கொண்டே வந்தது

நதியில்  ரகசியங்கள் தொலைத்து
கரையில் சிரிப்பொலிகள் தொலைத்து  
நிலவில் பகல் தொலைத்து - நாம் விடைபெறும் நேரம் 
பற்றிய உன்கரம் காற்றில் தொலைத்து -
     
கடந்து போனது ஞாபகமிருக்கிறது 
-பாலம்-
உடைந்துமா போனது நாம் கடந்ததும் ?

No comments: