Thursday, January 11, 2018

அடிக்கரும்பு

மங்கி கேப்பை மாட்டிக்கிட்டு
மங்கலிலே கோலமிட்டு
பொங்கி வச்ச பொங்கலைப் போல்
பல்லைக் காட்டி இளிக்குறேனே
மச்சான்,
கல்லுளி மங்கனைப் போல்
கண்டுக்காம நிக்குறியே..

அடியே,
உறங்கி நான் நிக்கவில்லை
கெறங்கிப் போய் கவுந்துப் புட்டேன்....
அரும்புபோல பல்ல வச்சி
இரும்புபோல கரும்புக் கழி
எப்படி நீ கடிப்பேன்னு
ரோசனை நான் செய்யுறேன்டி

அடிக்கரும்பு வேரெல்லாம்
ஆசை மச்சான் மீசையின்னு
கடி கடின்னு கடிச்சிடுவேன்
கலங்காதே ராசாவே

சால்சாப்பு சொல்லாதே
சட்டுபுட்டுனு உரிச்சுத் தாரேன்
சாறெல்லாம் உறிஞ்சிப்புட்டு
சக்கரையா சுத்தி வாடி

No comments: