Monday, April 17, 2017

தோகை இளமயில் - remix


தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ?
வானில் வரும் முகில் கோடி மழைத்துளித் தூவி சுகம் தருமோ?
தேன் சிந்தும் நேரம் பூஞ்சோலை ஓரம்
காற்றோடு பூவாசம் சேர்கின்றதோ?

பூமி எங்கும் பூந்தோட்டம் நாம் காண வேண்டும்
புதுத்தென்றலோ பூக்களில் வசிக்கும்
ஆகாய மேகங்கள் நீறூற்ற வேண்டும்
அந்த மழையில் அருவியும் குளிக்கும்
அருவிகளோ வீரம் பெறும்
புரவிகள்போல் பாய்ந்தே வரும்
அன்னமும் குளங்களில் மிதந்துவரும்
பலவிதப் பறவைகள் வான்போகும் ஊர்கோலம்

பச்சை வண்ண வான்மேகம் நாம் காண வேண்டும்
மரநிழலில் மலர்களும் உறங்கும்
ஊரிலெங்கும் உற்சாகம் ஊற்றாக ஊறும்
வயல்வெளியில் கயல்களும் உலவும்
உழவனுக்கோர் நேரம் வரும் விளைந்திடவே யோகம் வரும்
மண்ணிலே இன்பங்கள் நிலைத்துவிடும்
மரம் நட மரம் நட மழை தரும் கார்காலம்

#மரம்நடுவோம்

நன்றி: இளையராஜா, வைரமுத்து
உங்கள் பயணங்கள் முடிவதில்லை!

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா...!

ரசித்தேன்...

வெங்கட் நாகராஜ் said...

வாவ்.... ரசித்தேன்.

பாராட்டுகள்.

மோ.சி. பாலன் said...

மிக்க நன்றி தனபாலன் & வெங்கட்