Thursday, March 30, 2017

செவ்வந்தி மாலை இதோ

சாய்ந்த உன் முகம் பார்த்து
சட்டென்று தலை கவிழும்...
பாய்ந்த உன் நகை பார்த்து
பட்டென்று சிரிப்பு வரும்...

காற்றினில் பூ கட்டும்
கைவிரல் அசைவினுடன்
நீ பேசிய கதைகளெல்லாம்
நெஞ்சத்தில் கோத்துவைத்தேன்

சில பல நாட்களாக
செய்தி ஒன்றும் காணவில்லை..

செவ்வந்தி மாலை இதோ...
சீக்கிரமாய் அழைத்திடடி - உன்
செஞ்சேலைப் படம் ஒன்றை
செல்போனில் திறந்து வைத்தேன்...
கன்னத்தில் முத்தமிட்டு நீ பேச

4 comments:

Thenammai Lakshmanan said...

அழகான கவிதை

மோ.சி. பாலன் said...

மிக்க நன்றி தேனம்மை

இராய செல்லப்பா said...

காதல் வருகிறது- படித்தவுடன்!

- இராய செல்லப்பா (இன்று) நியூ ஆர்லியன்ஸ்

மோ.சி. பாலன் said...

நன்றி செல்லப்பா