Monday, March 20, 2017

இளைஞர்களின் கை கோருங்கள்

இளைஞர்களின் கை கோருங்கள்
அவர்கள் களைப்படைந்து ஓய்வது இல்லை
பெருமைகளைப் பேசிப் பாருங்கள் அவர்கள் புகழுரையை நாடுவதில்லை

நெல்லை மென்று தின்னும் மனம் இல்லாதவர்
நில்லாமல் பேசும் நாட்டம் துளியும் அற்றவர்
கொல்லை வழியில் நுழைந்து ஒட்டும் தன்மையற்றவர்
தொல்லையற்ற வாழ்வை விரும்பும் விரதம் ஏற்றவர்
அல்லல்படும் பெரியவரே அஞ்சாதீர்கள்
எல்லாமே அவர் அறிவார் தள்ளி நில்லுங்கள்
ஆளுகின்ற உரிமை அவர்க்குத் தந்து செல்லுங்கள்
அமைதி இந்த உலகில் திரும்பும் வந்து பாருங்கள்

(பாடல் மெட்டு: இறைவனிடம் கையேந்துங்கள்)

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

வெங்கட் நாகராஜ் said...

அந்த மெட்டில் பாடிப் பார்த்தேன் - மனதுக்குள் தான்! :)

நன்றாக இருக்கிறது பாடல். பாராட்டுகள்.

மோ.சி. பாலன் said...

மிக்க நன்றி தனபாலன் & வெங்கட் !