Tuesday, March 17, 2015

அழகோவியம்

கொண்டை குலுங்கிடக் குதித்துக் குளம்பொலி
        செண்டை அடித்திடும் புரவிகள் பூட்டி
கெண்டை சிலம்பெனச் சிலும்பிட அலைஎழும்
        பொன்னி நதிக்கரைப் புழுதியை மாற்றி
அண்டம் நிறைத்து அழகோவியம் தீட்டிடும்
        பெண்ணின் விழிச்சுடர் சோதியும் போற்றி
கண்டு வியந்தனர் அரண்மனை நான்வர
        என்னெழில் ரதிமகள் ரதத்தில் ஏற்றி