Saturday, March 14, 2015

வலக்கையின் விருப்பம்


மூன்று முடிச்சு போட்டு
பின்புறமாய்ச் சுற்றி
எட்டி உனது நெற்றியில்
பொட்டுவைக்க விருப்பமடி
என் வலக்கரத்திற்கு…
இன்னும் கூடி வரவில்லை
அதற்கான நேரம்

துப்பட்டாவைப் போல்
உன் தோள்மீது மெதுவாய்த்
தொட்டுப் படரவும்
காலம் வரவில்லை
என் கரத்திற்கு…

இப்போது அதன் சிறுவிருப்பம்
என்னவென்றால்
உனது இடக்கையின்
இடைவெளியில் இழுத்து
மடிமீது அழுத்தி நீ பிடித்திருக்கும்
புடவை முந்தானையைப்போல்
உன் கரம் பற்றியிருப்பதே..

3 comments:

Unknown said...


நன்று!

மோ.சி. பாலன் said...

mikka nandri Ramanujam aiyyaa

மோ.சி. பாலன் said...
This comment has been removed by the author.