Tuesday, December 31, 2013

நம்மாழ்வார் ஐயா

நம்மாழ்வார் ஐயா...நீங்க
மண்ணெல்லாம் திரிஞ்சி
மண்ணுக்குள்ள போனதேனோ?

அப்பன் பாட்டன் பூட்டன்
சேத்து வச்ச சொத்தையெல்லாம்...
உசுரோடு - காத்து வந்த சொத்தையெல்லாம்
சர்க்காரு பேச்சக் கேட்டு சொத்தையா ஆக்கிப் புட்டோம்.
சக்கரையா இனிக்கிற எம் மண்ணை
சக்கையா ஆக்கிப் புட்டோம்
எதுக்கும் ஒதவாத மண்ணு எதுக்குன்னு நாங்க
பல்லைக்கூட பேஸ்டு வெச்சு வெளக்கிப்புட்டோம்

"பயிரைச் சோக்காளியாக்க
மண்ணைச் சீக்காளியாக்காதே"
ஐயா நீங்க அறிவுரையா சொன்னீரு..
ரெண்டு அறை விட்டுச் சொல்லலியே..
பெரியவங்க சொன்ன பேச்சு
அவுங்க போன பெறகுதான் கேக்குமோ?

பள பளன்னு ஜொலிக்கிற பலவித காய் வகைய
ஜிலு ஜிலுன்னு குளுர வெச்சி
செல நாளு போன பின்னே
சூடு பெட்டியில வெச்சிச் சுட வெச்சித் தின்னுறோம்.
ஐயா நீங்க கல்லெறிஞ்சி, கனி பறிச்சி, கடிச்சித் தின்னீரு..
நாங்க கப்பலுல வரவழச்சிக் கட் பண்ணித் தின்னுறோம்

"ஏம்பா ஒரு பூச்சி கூட தின்னாத
மருந்து போட்ட எல தழைய கீரையென்று தின்பாயா?"
ஐயா நீங்க பொட்டில் அடிக்கிறமாதிரி கேட்டாலும்
எங்க புத்தியில ஒறைக்கலியே..

எங்க பாட்டன் பூட்டனப்போல்
இந்த மண்ணுக்கு உரமாத்தான் போனீரோ?
மண்ணில் மக்கி ஒரு வேப்பமரமா வேகமா வாருமையா..
இன்னும் இங்க பல பேருக்குப் பேயோட்ட வேணும்.

4 comments:

Unknown said...


இரங்கல் பா! மனம் வருந்துகிறது

திண்டுக்கல் தனபாலன் said...

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் - இயற்கை எய்திய இயற்கை விஞ்ஞானி மதிப்பிற்குரிய திரு.கோ. நம்மாழ்வார் ஐயா அவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்...

Link : http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-1.html

அன்புடன் DD

Srividhya said...

Unmai nilai uraikkum nalla kavithai. We miss Nammazhvar ayya.

மோ.சி. பாலன் said...

nandrigal pala - pulavar raamaanusam aiyaa, thanabaalan, srividhya