Friday, June 21, 2013

இப்படி இருந்திருந்தால்

என்னிரு கரங்கள் கால்களாகவே இருந்திருந்தால்
உணவினை வாயில் திணித்திருக்க மாட்டேன்.
என் முதுகெலும்பு வளைந்தே இருந்திருந்தால்
இன்றெனது தலைக்குனிவு இயல்பாய் இருந்திருக்கும்.
நானசைத்து ஆட வாலொன்று இருந்திருந்தால்
வாளசைக்கும் விளையாட்டு ஆடியிருக்க மாட்டேன்.
எனக்கறிவு என்றும் ஐந்தாகவே இருந்திருந்தால்
பகுத்தறிவால் பைத்தியம் ஆகியிருக்க மாட்டேன்.
விலங்காக மட்டும் நான் இருந்திருந்தால்
விளங்காத பொருளாய் உலகை மாற்றியிருக்கமாட்டேன்

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது...

வாழ்த்துக்கள்...

வெற்றிவேல் said...

நல்ல கவிதை!!!

வாழ்த்துகள்...

மோ.சி. பாலன் said...

தனபாலன், இரவின் புன்னகை - மிக்க நன்றி