Friday, April 26, 2013

இவனுக்கு என்ன வந்தது?

வாகனத்தில் செல்பவனுக்கு
எருமை வாகனன் இருப்பதை
பாதை நடுவில் திறந்த
பாதாள சாக்கடையில்
கிளை நட்டுக் காட்ட
பாதையோரம் நடக்கும்
பாதசாரிக்கு ஏன் தோன்றியது?

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு மனிதாபிமானம்...

மகேந்திரன் said...

ஈர நெஞ்சம்...

கௌதமன் said...

இவனுக்கு என்ன வந்தது?
பயம்!
பானம் அருந்தி பாதை
பாராமல் பயணிக்கும் அவன்
பாதை விட்டு விலகி
பாதசாரி தன்னை அடித்து
பலமாய் வீழ்த்துவனோ என்று!

மோ.சி. பாலன் said...

தனபாலன், மகேந்திரன் இவர்கள் இருவரும் சொல்வதுபோல் மனிதநேயம் தான் இதற்கு காரணம். கௌதமன் அவர்கள் சொல்வது போல் பாதசாரி தன்மீது பயம் கொண்டிருக்கமாட்டான் என்று கருதுகிறேன்.