Sunday, August 30, 2009

எழு

மனித சமுத்திரமே
உன் அலைகள்
எழுந்து எழுந்து நின்றாலும்
விழுந்து விழுந்து போகின்றனவே
ஏன்?

கதிரவனின் ஒளிக்கரங்களில்
எத்தனை எத்தனை கயிறுகள் பார்.
பற்றி எழு.

மேகமாய் அமோகமாய் உயர்ந்து
உலகம் உய்ய மழையாய்ப் பொழி

ஆரவார அலைகளை நிறுத்தி
அமைதியாய்
எழு.

No comments: