Wednesday, June 24, 2009

குழந்தையின் பலூன்

" ஊதிவிட்டோம் பெரிதாய்.. "
குழந்தை உவகையுடன் நகைத்தால்,
வாயினின்று ஓடிப் பறக்கும்
வளி வெளியேறும். உடல் மெலிதாகும்.

கருத்துடன் தந்தை காற்றடைத்து
கயிறெடுத்துக் கட்டிக் கொடுக்கக்
குழந்தைகள் எட்டி உதைத்தாலும்
ஒழுங்காய்க் கிடக்கும்
உடையாமல் பலநேரம்.

சிறப்பாய்ப் பேணி சீரிடத்தில்
வைத்தாலும்
சிறிதாய்க் காற்றிறங்கும் சில நேரம்.

சில நேரம்
சிதறி வெடித்துவிடும்.

No comments: