Wednesday, June 24, 2009

அம்மா

அம்மா
நான் தோள் நிமிர்ந்து நிற்பதற்குள்
உன் தோல் சுருங்கிப் போனதம்மா

தியாக ஒளியே கற்பூர தீபம் நீ
அழுகின்ற மெழுகல்ல

நீ என்னை உன்னிலிருந்து
வேராக்கி வேறாக்கியும் வேறாக்கவில்லையே

அன்னை உனைப் பாடுகையில் என் புலமை இங்கு தாழ்கிறது

அம்மா, இன்று நான் இறந்தால்
உண்மையாக அழ உன்னை விட்டால் யாரம்மா?

உயிர் தந்த தாயே,
நான் ஆணான போதும் உனக்கு அன்னையாகும் வரம் தா.


No comments: