Wednesday, August 30, 2017

அமைதிச்சோலை அகிலமாக

மிருக மனதை மிருதுவாக்கும்
மதங்கள் யாவும் புனிதமே
மனித மனதில் மனிதம் வளர்க்கும்
வரிகள் யாவும் வேதமே

தேசம் யாவும் கூடிவாழ
நேசபூமி உதயமே
கடவுள் யாவும் கூடிப்பேச
மதங்கள் யாவும் சொந்தமே

தெய்வ சிந்தை செய்யும் யாரும்
மனித சிந்தை மறப்பதோ?
தெய்வ நிந்தை செய்யும் யாரும்
மனித நிந்தை புரிவதோ?

பகைமை உணர்வு மறையும்போது
கரைகள் இரண்டும் பசுமையே
அமைதிச்சோலை அகிலமாக
மதங்கள் நதிகள் ஆகுமே

No comments: