Tuesday, August 8, 2017

சபரியின் ஆலயமே

சபரியின் ஆலயமே என்றும்
சாமிகள் சரணாலயம்
சரணங்கள் ஆயிரமே எங்கள்
நாவினில் பாராயணம்
ஹரிஹர புத்திரனே எங்கள்
விழிகளில் அருணோதயம்
அரணெனக் காத்திடுவான் ஐயன்
அருள் தரும் கருணாமிர்தம்

நோன்புகள் நாமிருந்தோம் ஐயன்
மாண்பினைப் பாடிவந்தோம்
தேனடை ஈக்களென ஐயன்
கோயிலை நாடி வந்தோம்
வானுயர் ஜோதி கண்டோம் நெஞ்சில்
காரிருள் நீங்கக் கண்டோம்
கானுறை கோயிலிலே எங்கள்
ஊனுறை உயிரும் கண்டோம்

6 comments:

வெங்கட் நாகராஜ் said...

சரணம் ஐயப்பா....

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாமியே சரணம் ஐயப்பா...

KILLERGEE Devakottai said...

ஸூப்பர் சரணம் நண்பரே
த.ம.2

மோ.சி. பாலன் said...

மிக்க நன்றி வெங்கட்

மோ.சி. பாலன் said...

மிக்க நன்றி தனபாலன்

மோ.சி. பாலன் said...

மிக்க நன்றி கில்லர்ஜீ