Wednesday, July 12, 2017

பாய் போட்ட கார்மேகம்



மயிற்றோகை விரித்தாட மதுவூறும் மலராட
எழில்மேகம் விரைந்தோடி வழியெங்கும் நடமாட
மரமெங்கும் இலைதோறும் மழைச்சோறு பரிமாற
காய்ச்சீரும் கனிச்சீரும் வரும்நாளில் வரவாக
கரையெங்கும் அலைமோதி வயல்நீரும் தடுமாற
களச்சேற்றில் விவசாயி இளநாற்றை அடியூன்ற
பாய்போட்ட கார்மேகம் கனவாகக் கரைந்தாலும்
தாய்மாட்டின் மடிபோலப் பாலாகப் பொழியாதோ?
தாய்நாட்டின் தாகத்தைத் தண்ணீரால் தீர்க்காதோ?

3 comments:

KILLERGEE Devakottai said...

தங்களது விண்ணப்பம் விரைவில் நிறைவேறும் நண்பரே

அருமை வாழ்த்துகள் - கில்லர்ஜி

மோ.சி. பாலன் said...

மிக்க நன்றி கில்லர்ஜி

மோ.சி. பாலன் said...

நன்றி தனபாலன்