Wednesday, June 7, 2017

ஏண்டியம்மா இதயத்துல மூடியிருக்கு கதவு?

ஏண்டியம்மா இதயத்துல மூடியிருக்கு கதவு?
எப்பொழுதும் நானும் வர திறந்து நீயும் உதவு

சத்திரமா இதயம் உனக்கு? போய்விடு நீ தொலைவு
சத்தியமா பிடிக்கவில்லை ஒழிஞ்சி நீயும் உதவு

பத்தியம்தான் இருந்து பார்த்தேன் தெளியவில்லை பித்து
கட்டிப்பிடி நானும் தாரேன் கன்னத்தில முத்து

முத்து தர நீயும் வந்தா நான் விடுவேன் குத்து
குத்து மதிப்பாக உனக்கு எவ்வளவிருக்கு சொத்து?

சோத்துக்கொரு குறையுமில்லை வளந்துநிக்குது நாத்து
போத்திக்கிட்டுப் படுத்து உறங்க கூரை மேல கீத்து

தின்னுவிட்டு தூங்குவதில் பெருமை என்ன இருக்கு?
சொல்லிக்கொள்ள பெருமையாக வேறு என்ன இருக்கு?

அள்ளி அள்ளி சரம் சரமா நான் படிப்பேன் பாட்டு
துள்ளித் துள்ளி குதிக்கப் போற நீயும் அதைக் கேட்டு

பாட்டுக்காரன் வாய் திறந்தா புறப்படுமே பொய்யி
வீட்டுக்காரனாக வந்தா கரையுமே என் மையி

தாலாட்டு நான் படிச்சா சொக்கிப் போகும் கண்ணு
தூங்குகிற கண்ணுல மையி கரையுமாடி கண்ணு?

நல்லாத்தான் விளக்கம் தாரே நடு வீதியில நின்னு
அத்தையைத்தான் கூட்டி வந்து வீட்டுல கேளு பொண்ணு

(...... வெட்கத்துடன் ஓடிப்போகிறாள் )

3 comments:

Nagendra Bharathi said...

அருமை

திண்டுக்கல் தனபாலன் said...

அட....! அசத்தல்...!

மோ.சி. பாலன் said...

நன்றி நாகேந்திர பாரதி & தனபாலன்