Tuesday, June 20, 2017

எங்கிருந்தோ வந்த மழை

எங்கிருந்தோ வந்த மழை என் மண்ணில் வாசம் கூட்டும்
எங்கிருந்தோ வந்த மழை என் பயிரில் பாசம் காட்டும்
எங்கிருந்தோ வந்த மழை என் மரத்தில் கனிரசமாகும்
எங்கிருந்தோ வந்த மழை என் மனதைப் பரவசமாக்கும்
எங்கிருந்தோ வந்த மழை என் குளத்தில் மீன் வளர்க்கும்
எங்கிருந்தோ வந்த மழை என் மலரில் தேன் நிறைக்கும்
எங்கிருந்தோ வந்த மழை என் முதுகில் சேறடிக்கும்
எங்கிருந்தோ வந்த மழை என் அழுக்கைக் கழுவி நீக்கும்
எங்கிருந்தோ வந்த மழை என் அழுகை கரைத்து நீர்க்கும்
எங்கிருந்தோ வந்த மழை என் கவிதை வரிகள் சேர்க்கும்

2 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

எங்கிருந்தோ வந்த மழை எங்களை ரசிக்க வைக்கும்.

மோ.சி. பாலன் said...

நன்றி!