Friday, November 18, 2016

பருவ மழை வேண்டுதல்

சஞ்சீவி மலை சுமந்த அனுமனே
எம் ஜீவன் பிழைக்கவும் நீர் அருள்வீர்
மலை போன்ற மேகங்கள் - உம் தந்தை
வாயுவிடம் தந்தனுப்புங்கள்

பள்ளி கொண்ட பெருமானே
கொள்ளி பற்றுமோ எம் பயிர்களை?
கடலினைக் கடைந்தெடுத்து
அமிர்த மழை தாருங்கள்

ஈசனே நீல கண்டரே
பாசம் வைப்பீர் பரமனே
கரியமில நஞ்செல்லாம்
காற்றினிலே நீக்கிவிட்டு
துரிதமாய்த் தாருங்கள்
பருவ மழை மேகங்கள்

ஏழை விவசாயியும் சிலுவையில் மரிப்பதோ?
செந்நீர் சிந்திய பரம பிதாவே உமது
பரிசுத்த ஆவியால் நன்னீர் மேகங்கள் நல்குவீரே

கடனுக்கு வட்டி பாவம் என்ற நபிகளே
பயிர் செய்யக் கடன் வாங்கி
உயிர் மாய்ப்பதா ஒரு விவசாயி?
அல்லாவின் கருணையால்
எல்லோர்க்கும் பெய்யட்டும் மழை

ஆசையினால் துன்பமென்றீர் ஐயா
வயிற்றுப் பசி ஆசையா துன்பமா?
புத்தம் புது மேகங்கள் தாருங்கள் புத்தரே

சாய் பாபா விவசாயி பாபா

No comments: