Friday, February 12, 2016

பேரமைதி

பள்ளியறையில் உன் நினைப்பைப்
பித்தமென்று தள்ளினேன்
பூசையறையிலும் தொடர்ந்த
உன் நினைப்பைப்
பக்தியென்று புரிந்துகொண்டேன்
நீ விலகிச் சென்ற நாள்முதல்
எனக்குப்
பாலைவன தாகமடி....
துயர் அழுத்தும் மூச்சடைப்பில்
உன் நினைப்பே
என் உயிர்ப்பிடிப்பு...
அருகில் நீ வரும் நாளில்
துடிப்புகள் அடங்கி
சவமென நான் உணர்வழிப்பேன்
அன்று நான் கொள்வேன்
பேரமைதி

No comments: