Monday, August 3, 2015

உயிர்த்துளி

மணித்துளி ஒவ்வொன்றும் உயிர்த்துளி
கவனித்து அதை நீ செலவழி
செ(ல்)லவழி பலவுண்டு கண்டபடி
அதில் நல்லவழி நீயும் கண்டுபிடி
கண்டுபிடி நல்லநல்ல வாய்ப்புகள்
கனியும் உன் தோட்டத்துக் காய்ப்புகள்
காய்ப்புளி வேண்டாம் கனி புகல்
புகழ் மற, மறவாதே புகழ
இயல்கின்ற போதெல்லாம் சிரித்துவிடு
அயலவர் கண்ணீர் துடைத்துவிடு
விடுவதற்கில்லை வாழ்க்கை
கெடுவதற்கில்லை காலம்
மனதினைச் செதுக்கிடும் இழைப்புளி-
மணித்துளி ஒவ்வொன்றும் உயிர்த்துளி

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொரு வரியும் கருத்துள்ளவை...

மோ.சி. பாலன் said...

Nandri Dhanapalan