Saturday, January 11, 2014

தமிழா நீ தமிழ் பேசு

தமிழா நீ தமிழ் பேசு
தமிழா நீ தமிழில் பேசு
தமிழா நீ தமிழ் இல் பேசு

உறவாடுது உயிர்மெய் எழுத்து
மறையாதது மெய் எழுத்து
மறைந்திருப்பது உயிர் எழுத்து
மறவாதே தமிழ் உன் தலை எழுத்து

காலங்கள் தாண்டி நீண்டது வேர்ச்சொல்
ஞாலம் முழுதும் பரந்தது கிளைச்சொல்
கிளை ஒவ்வொன்றிலும் கனியட்டும் தமிழ்ச்சொல்
கனி வேண்டின் வேண்டும் நீர் 'பாய்ச்சல்'

தமிழ் விழுகிறது எனும் மாக்களுக்'குரை'
"சரிதான் போய்யா... போம்மா...
நீ விட்டா தமிழ் விழுது?
நான் விட்டால் தமிழ் விழுது!"

4 comments:

தனிமரம் said...

அருமைக்கவி ஐயா

திண்டுக்கல் தனபாலன் said...

சொன்னவிதம் அருமை...

வாழ்த்துக்கள்...

Yaathoramani.blogspot.com said...

வழிகாட்டும் அற்புதமான கவிதை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 2